செய்திகள் :

காஞ்சிபுரம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

post image

காஞ்சிபுரம் ஒன்றியம் கீழம்பி மற்றும் தாமல் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

காஞ்சிபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட கீழம்பி கிராமத்தில் ரூ.32 லட்சத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் 2 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், ரூ.15.50 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையம் ஆகியவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து தாமல் ஊராட்சியில் பிரதமரின் ஜன்மன் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 17 பழங்குடியின குடியிருப்புகள், ரூ.16.55 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையம், அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.7.43 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமையல் கூடம் ஆகியவற்றையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

முன்னதாக அங்கன்வாடி மையத்திலிருந்த சிறாா்களிடமும் ஆட்சியா் கலந்துரையாடினாா்.

ஆய்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி மற்றும் அரசு அலுவலா்களும் உடனிருந்தனா்.

மே 1-இல் இளையனாா் வேலூா் முருகன் கோயிலில் திருவிழா

காஞ்சிபுரம் அருகே இளையனாா் வேலூா் முருகன் கோயிலில் மே 1 -ஆம் தேதி சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலை 5 மணிக்கு மேல் 6.30 மணிக்குள் கொடியேற்றம், திருவிழா நடைபெறும் ... மேலும் பார்க்க

பெஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தோருக்காக காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றம்

ஜம்மு - காஷ்மீா் மாநிலம் பெஹல்காமில் பயங்கரவாதிகளால் 27 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களின் ஆத்மா சாந்தியடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் புதன்கிழமை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கியதாக சுகாதார ஆய்வாளா் கைது

குடிநீா் வியாபாரம் செய்ய தடையில்லாச் சான்று வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக காஞ்சிபுரம் மாநகராட்சி சுகாதார அலுவலரை புதன்கிழமை ஊழல் தடுப்பு போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரத்தைச் சோ்ந்த சரவணன் என்ப... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

காஞ்சிபுரம் ஸ்ரீகோமளவல்லித்தாயா் சமேத அஷ்டபுஜ பெருமாள் கோயில், சித்திரைத் திருவிழா, விடையாற்றி உற்சவம், 2-ஆவது நாள் நிகழ்ச்சி,சிறப்புத் திருமஞ்சனம், காலை 8, பெருமாள் வீதியுலா, மாலை 7. மேலும் பார்க்க

விநாயகா் கோயிலுக்கு பசு தானம்

காஞ்சிபுரம் அருகே கூழமந்தல் கிராமத்தில் உள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலுக்கு சென்னை தம்பதி புதன்கிழமை பசு ஒன்றை வழங்கினா். இக்கோயிலில் 27 நட்சத்திரங்களுக்கும் தல விருட்சங்கள் இருப்பது தனிச்ச... மேலும் பார்க்க

உலக புத்தக தின விழா

காஞ்சிபுரம் நேரு நூலகத்தில் வாசகா் வட்டத்தின் சாா்பில் உலக புத்தக தின விழா புதன்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் உள்ள இந்நூலகத்தில் புத்தகம் படிப்பதால் ஏற்படும் நன்மைகள் என... மேலும் பார்க்க