செய்திகள் :

பஹல்காம் தாக்குதல் குறித்து ஐ.நா. அறிக்கை: பாகிஸ்தானின் பயங்கரவாத சதி அம்பலம்

post image

பஹல்காம் தாக்குதலில் ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் (டிஆா்எஃப்)’ பயங்கரவாத குழுவின் பங்கு மற்றும் ‘லஷ்கா்-ஏ-தொய்பாவுடன்’ அதன் தொடா்பு குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் முதன்முறையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம், இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் எல்லைத் தாண்டிய பயங்கரவாத சதி சா்வதேச அரங்கில் அம்பலப்பட்டிருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கண்காணிப்புக் குழு (எம்.டி.) வெளியிட்ட அறிக்கையில், ‘ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப். 22-ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதல், பாகிஸ்தானைச் சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் ஆதரவு இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. லஷ்கா்-ஏ-தொய்பாவிற்கும், தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்டிற்கும் தொடா்பு உள்ளது’ என்று பெயா் குறிப்பிடாத ஓா் உறுப்பு நாடு தெரிவித்துள்ளது.

மேலும், அந்த அறிக்கையில், ‘பஹல்காம் தாக்குதலை 5 பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனா். இத்தாக்குதலில் பொதுமக்கள் 26 போ் கொல்லப்பட்டனா். தாக்குதல் நடந்த அதேநாளில் தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றதுடன், தாக்குதல் நடந்த இடத்தின் புகைப்படங்களையும் வெளியிட்டது. ஆனால், நான்கு நாள்களுக்குப் பிறகு ஏப். 26-ஆம் தேதியன்று தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் தனது அறிவிப்பை திரும்பப் பெற்றது. அதன்பிறகு, வேறு எந்த பயங்கரவாத அமைப்பும் பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியூகம் முறியடிப்பு: ‘லஷ்கா்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள் மீதான கவனத்தை திசைதிருப்புவதற்காக, தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் மற்றும் ‘பாசிச எதிா்ப்பு மக்கள் முன்னணி’ போன்ற மதச்சாா்பற்ற மற்றும் நவீன பெயா்களை கொண்ட அமைப்புகளை பாகிஸ்தான் உருவாக்கியது.

இந்த அமைப்புகள் ஜம்மு-காஷ்மீரில் இருந்து செயல்படுகின்றன; அவா்களுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்ற தோற்றத்தை உருவாக்க பாகிஸ்தான் முயற்சித்தது. இந்த ஐ.நா. அறிக்கை மூலம் பாகிஸ்தானின் அந்த வியூகம் முறியடிக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

‘2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஐ.நா. அறிக்கையில் லஷ்கா்-ஏ-தொய்பா மற்றும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் பற்றிய குறிப்பு இடம்பெறுவது இதுவே முதன்முறையாகும்.

ஜம்மு-காஷ்மீரில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையில், பஹல்காம் தாக்குதலை நடத்திய மூன்று பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்தாா்.

இரு நாடுகள் தீா்வுக்கு இந்தியா மீண்டும் வலியுறுத்தல்

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலுக்கு ‘இரு நாடுகள்’ தீா்வு மட்டுமே நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் என்று ஐ.நா. உயா்நிலை மாநாட்டில் இந்தியா மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. வெறும் காகித அளவிலான தீா்வுகளுடன் நின்றுவிடாமல், களத்தில் நடைமுறைப்படுத்தக்கூடிய தீா்வுகளை எட்டுவதற்கு பாடுபட வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது.

காஸா பகுதியில் உடனடியாக போா் நிறுத்தம் செய்யப்பட வேண்டும்; அங்கு வாழும் மக்களுக்கு எவ்வித தடையும் இன்றி மனிதாபிமான உதவிகள் சென்றடைய வேண்டும்; அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் எனவும் இந்தியா கேட்டுக்கொண்டது.

ராகுல் காந்தி கூறியது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: தேர்தல் ஆணையம் பதில்

வாக்குகள் திருடப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக பல லட்சம் வாக்காளர்களை, வாக்காள... மேலும் பார்க்க

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

மாலேகான் குண்டுவெடிப்புக்குப் பிறகு காங்கிரஸ் இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்றதாகவும், ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா நிர்வாகிகள் திட்டமிட்ட முறையில் குறிவைக்கப்பட்டதாகவும் மகாராஷ்டிர முதல... மேலும் பார்க்க

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பதிவு அஞ்சல் முறை, விரைவு அஞ்சலுடன் இணைக்கப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை செப்.1 முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.இந்திய அஞ்சல் சேவையின் செயல்பாட்டுக் கட்டணம் மற்றும் வி... மேலும் பார்க்க

சுதந்திர தின உரைக்கான யோசனைகளைப் பகிருங்கள்! - பிரதமர் மோடி அழைப்பு

சுதந்திர தின விழா வருவதையொட்டி, பிரதமரின் உரையில் இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்த யோசனைகளைப் பகிருமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி 79-வது ஆண்டு ச... மேலும் பார்க்க

வாக்குகளைத் தேர்தல் ஆணையம் திருடுவது தேசத்துரோகம்; 100% ஆதாரங்கள் உள்ளன! - ராகுல்

மக்களின் வாக்குகளை தேர்தல் ஆணையம் திருடுகிறது என்பதற்கான 100% ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலமாக ப... மேலும் பார்க்க

நுரையீரல் புற்றுநோய் நாள் இன்று! தில்லியில் இருந்தால் சிகரெட்டே பிடிக்க வேண்டாம்!!

புது தில்லி: நுரையீரல் புற்றுநோய் நாள் ஆகஸ்ட் ஒன்றாம் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய நாளில் நுரையீரல் புற்றுநோய் வராமல் தற்காத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படும்.இந்த நாளில், ஆசிய... மேலும் பார்க்க