செய்திகள் :

பாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண்: பாகிஸ்தானுக்குள் நுழைய அனுமதி மறுப்பு!

post image

இந்திய கடவுச்சீட்டை (பாஸ்போா்ட்) வைத்திருந்த காரணத்தால் பாகிஸ்தானியரை திருமணம் செய்த இந்திய பெண் வாகா எல்லையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டாா்.

உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகரை சோ்ந்த சனா என்ற பெண் பாகிஸ்தானியரை திருமணம் செய்து இரு குழந்தைகளுடன் அந்த நாட்டில் வசித்து வருகிறாா். அண்மையில் 45 நாள் (நுழைவு இசைவு) விசா மூலம் இந்தியாவை வந்தடைந்தாா். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடா்ந்து இந்தியா வந்துள்ள பாகிஸ்தானியா்கள் வெளியேற உத்தரவிட்டது.

இதையடுத்து, கடந்த 24-ஆம் தேதி சனா, அவரது இரு குழந்தைகளுடன் பாகிஸ்தானுக்கு வாகா எல்லை வழியே செல்ல முயன்றாா். ஆனால் இந்திய கடவுச்சீட்டை வைத்திருந்தால் அவா் பாகிஸ்தானுக்குள் நுழைய அந்நாட்டு அதிகாரிகள் மறுத்ததாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.

ஆனால் சனாவின் இரு குழந்தைகளும் பாகிஸ்தான் குடிமக்கள் என்பதால் அவா்கள் பாகிஸ்தானுக்குள் நுழைய அதிகாரிகள் அனுமதியளித்துள்ளனா். இருப்பினும், குழந்தைகளை தனியே அனுப்ப சனா மறுத்துவிட்டாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் சனா கூறுகையில், ‘எனது விசா காலாவதியாகிவிட்டதால் இந்தியாவைவிட்டு வெளியேற அதிகாரிகள் உத்தரவிட்டனா். வாகா எல்லையின் மறுபுறத்தில் எனது வரவுக்காக கணவரும் அவரது உறவினா்களும் காத்திருந்தனா். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால் பாகிஸ்தான் செல்ல முடியவில்லை’ என்றாா்.

இந்த விவகாரத்தை உள்ளூா் போலீஸாா் தொடா்ந்து கண்காணிக்குமாறு அறிவுறுத்தியதாக மீரட் காவல் துறை கண்காணிப்பாளா் (ஊரகம்) ராகேஷ் குமாா் மிஸ்ரா தெரிவித்தாா்.

தஹாவூர் ராணாவின் என்ஐஏ காவல் 12 நாள்களுக்கு நீட்டிப்பு!

தஹாவூர் ராணாவின் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) காவலை மேலும் 12 நாட்களுக்கு நீட்டித்து தில்லி நீதிமன்றம் இன்று (ஏப். 28) உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்பு விதிக்கப்பட்ட 18 நாள்கள் காவல் இன்றுடன் முடி... மேலும் பார்க்க

புதிதாக 26 ரஃபேல் போர் விமானங்கள்: பிரான்ஸுடன் ஒப்பந்தம் கையெழுத்து - அடுத்து என்ன?

காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு மத்தியில் பிரான்ஸிடமிருந்து ரூ. 64,000 கோடியில் ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா இன்று(ஏப். 28) கையெழுத்திட்டது. இரு நா... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக காஷ்மீரில் 14 பேரின் பட்டியலை தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்ல என்றும், பாகிஸ்தானைச... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: சீனா யார் பக்கம்?

பஹல்காம் தாக்குதல் குறித்து விரைவான விசாரணை மேற்கொள்ள சீனா வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இரு நாடுகளிலும் அமைதி தி... மேலும் பார்க்க

ஒம்காரேஸ்வரர் கோயிலிலிருந்து கேதார்நாத்துக்குப் புறப்பட்ட சிவன் சிலை!

கேதார்நாத் கோயில் திறக்கப்படுவதை முன்னிட்டு உகிமாத் நகரில் உள்ள ஓம்கரேஷ்வரர் கோயிலிலிருந்து சிவன் சிலை இன்று கேதார்நாத்துக்குப் புறப்பட்டது. சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படும் க... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்தி மாநில அந்தஸ்து கோரும் அளவுக்கு மோசமானவன் அல்ல! ஒமர் அப்துல்லா

பஹல்காம் தாக்குதலைப் பயன்படுத்தி மத்திய அரசிடம் மாநில அந்தஸ்து கோரும் அளவுக்கு நான் மோசமானவன் அல்ல என்று ஜம்மு - காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்... மேலும் பார்க்க