செய்திகள் :

``பாகிஸ்தானுக்கு ஆதரவான அறிக்கையை வாபஸ் பெறுகிறோம்" - இந்தியக் குழுவை சந்தித்த கொலம்பியா அறிவிப்பு!

post image

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக நடத்தப்பட்ட `ஆபரேஷன் சிந்தூர்' பற்றி உலக நாடுகளுக்கு விளக்கும் நோக்கில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையில் மத்திய பா.ஜ.க அரசு அனைத்துக் கட்சிக் குழு அமைத்திருக்கிறது. இந்தக் குழு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குச் சென்று இந்தியாவின் தீவிரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டையும், நடவடிக்கைகளையும் விளக்கிவருகிறது. அதர் தொடராக வியாழக்கிழமை கொலம்பியா சென்ற அந்தக் குழு செய்தியாளர்களைச் சந்தித்தது.

சசி தரூர்
சசி தரூர்

அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி சசி தரூர், ``இந்தியாவில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்குப் பதிலாக, பாகிஸ்தானில் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்த கொலம்பியாவின் அறிக்கை ஏமாற்றத்தை அளித்தது" என்றார். அதைத் தொடர்ந்து இந்தியத் தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிர் இழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட முந்தைய அறிக்கையை கொலம்பியா அதிகாரபூர்வமாக வாபஸ் பெற்றுள்ளது.

இந்தியாவின் அனைத்துக் கட்சிக் குழுவைச் சந்தித்த பிறகு, கொலம்பியாவின் துணை வெளியுறவு அமைச்சர் ரோசா யோலண்டா வில்லாவிசென்சியோ, “ எங்களுக்குக் கிடைத்த விளக்கம், அங்கு இருக்கும் உண்மையான நிலை, காஷ்மீரில் என்ன நடந்தது என்பது குறித்து இப்போது எங்களுக்குக் கிடைத்த விரிவான தகவல்களின் மூலம், பேச்சுவார்த்தையைத் தொடர முடியும் என்பதில் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளோம். எனவே, எங்களின் கவலை தெரிவித்த அறிக்கையை திரும்பப் பெறுகிறோம். இந்த விஷயத்தில் எங்கள் நிலைப்பாட்டை தூதுக்குழு முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளது." என்றார்.

"அதிமுக - பாஜக-வுக்கு அதிகாரம் கொடுத்தால், அந்த சாரை கண்டுபிடித்து விடுவோம்" - நயினார் நாகேந்திரன்

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ”தமிழக முதல்வர் ஞானசேகரன் பாலியல் வழக்கை பற்றி பெருமையாக பேசுகிறார். அந்த தீர்ப்பை பற்றி பெருமையாக பே... மேலும் பார்க்க

'ஒரு நாள் Promotion' - ஓய்வுபெறும் நாளில் பதவி உயர்வு அளிக்கும் மத்திய அரசு; பின்னணி என்ன?

முதல்வன் படத்தில் அர்ஜுன் எப்படி 'ஒரு நாள் முதல்வர்' ஆவாரோ, அதேபோல, மத்திய அரசும் 'ஒரு நாள் பதவி உயர்வு' திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.என்ன திட்டம்? நீண்ட காலமாக ஒரு துறையில் பணிபுரிந்து வருபவர... மேலும் பார்க்க

Kashmir: "தேசப்பற்றுடன் இருப்பது அவ்வளவு கடினமா?" - காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் கேள்வி

காங்கிரஸின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித், கடந்த வெள்ளிக்கிழமை, இந்தோனேசியாவில் உரையாற்றி இருந்தார். அங்கே அவர், "அரசியலமைப்பு பிரிவு 370-ன் கீழ், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து, இந்... மேலும் பார்க்க

DMK: "மதுரைக்காரர்கள் என்றால் திமுக தலைமைக்குப் பிடிக்காது" - செல்லூர் ராஜூ சொல்லும் காரணம் என்ன?

"மதுரையில் திமுகவின் பொதுக்குழு எப்போதெல்லாம் கூடுகிறதோ அப்போதெல்லாம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.இன்று செய்தியாளர்களிடம் பே... மேலும் பார்க்க

மதராஸி கேம்ப்: "ஆயிரக்கணக்கான தமிழர்கள் வீதியில் தங்கும் நிலை" - BJPக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

தலைநகர் புது டெல்லியில் ஜங்க்ப்புரா பகுதியில் உள்ள மதராஸி கேம்ப் பகுதியில் ஆண்டாண்டு காலமாக வசித்துவரும் தமிழர்களின் வீடுகள், நீர்நிலைப் பகுதி ஆக்கிரமிப்பு என்று கூறி, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அ... மேலும் பார்க்க

'தகுதியற்ற பட்டங்கள்; தேசிய கல்விக்கொள்கையை ஏற்று தான் ஆக வேண்டும்!' - மீண்டும் அரசை சீண்டும் ஆளுநர்

தமிழக ஆளுநராக ரவி பொறுப்பேற்றது முதல் தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடித்து விவகாரம் நீதிமன்றம் வரையில் சென்... மேலும் பார்க்க