செய்திகள் :

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் மோசமான வரலாறு மாறுமா?

post image

ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணியின் மோசமான வரலாறு மாறுமா? என ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆசியக்கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவிருக்கின்றன.

இந்திய சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய ஆயுதப்படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது தக்க பதிலடி கொடுத்தனர்.

இந்த விவகாரம் கிரிக்கெட்டிலும் பூதாகரமாக வெடித்த நிலையில், இந்திய அணி இனி ஒருபோதும் பாகிஸ்தானுக்கு எதிராக இருதரப்பு தொடர்களில் விளையாடாது எனத் தெரிவித்தது.

மேலும், ஆசியக் கோப்பைத் தொடரிலும் இரு அணி வீரர்களும் கைக்குலுக்காமலும், செய்தியாளர் சந்திப்பில் புகைப்படங்கள் எடுப்பதையும் தவிர்த்தனர்.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் வீரர்கள் ஷாகிப்ஸாதா ஃபர்ஹான் மற்றும் ஹாரிஸ் ரௌப் இருவரும் போர் விமானங்கள் தாக்கப்பட்டது குறித்து சைகை காண்பித்து கிண்டலடித்தனர்.

இந்தப் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் வருகிற 28 ஆம் தேதி இறுதிப்போட்டியில் மோதவிருக்கின்றன.

இதுவரை 5 முறை இந்தியாவும் பாகிஸ்தானும் ஐசிசி இறுதிப்போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், பாகிஸ்தானின் கையே ஓங்கியிருக்கிறது.

ஆஸ்திரேலிய-ஆசிய கோப்பையில் இரண்டு முறையும் (1986, 1994), 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி என மூன்று முறை பாகிஸ்தான் அணியே பட்டத்தை வென்றுள்ளது.

1985 ஆம் ஆண்டில் நடைபெற்ற பென்சன் - ஹெட்ஜஸ் உலக கிரிக்கெட் சாம்பியன்ஷிப் மற்றும் தோனி தலைமையில் 2007 ஆம் ஆன்டு டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

இதனால், ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை பழித்தீர்க்குமா அல்லது பாகிஸ்தானின் கையே ஓங்குமா? என ரசிகர்கள் ஆவலில் உள்ளனர்.

இதையும் படிக்க... 41 ஆண்டுகளுக்குப் பின் இறுதியில் இந்தியாவுடன் மோதல்! - பாக். பயிற்சியாளர் கூறுவதென்ன?

India have a disappointing record against Pakistan in tournament finals

கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; பாக். வீரர்களுக்கு பயிற்சியாளர் அறிவுரை!

பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் மைக் ஹெஸ்ஸன் அறிவுரை வழங்கியுள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூ... மேலும் பார்க்க

தோனியும், கோலியும்கூட துப்பாக்கியால் சுடுவது போல் சைகை செய்துள்ளனர்! - பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான்

துப்பாக்கியால் சுடுவது போன்ற சைகை அரசியல் அல்ல; இதனை இந்திய கேப்டன்கள் தோனியும் விராட் கோலியும்கூட செய்துள்ளனர் என பாகிஸ்தான் வீரர் ஷாஹிப்ஸாதா ஃபர்ஹான் ஐசிசி விசாரணையில் தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை ... மேலும் பார்க்க

ஷகிப் அல் ஹசனின் சாதனையை முறியடித்த முஸ்தஃபிசூர் ரஹ்மான்!

சர்வதேச டி20 போட்டிகளில் வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசனின் சாதனையை அந்த அணியின் சக வீரரான முஸ்தஃபிசூர் ரஹ்மான் முறியடித்துள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் துபையில் நேற்று (செப்டம்... மேலும் பார்க்க

பும்ரா - கைஃப் மோதல்: என்ன பிரச்னை?

இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர் பும்ராவின் மறுப்புக்கு முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் விளக்கம் அளித்துள்ளார்.தன்னுடைய கருத்தை தவறாக எடுக்க வேண்டாம் எனவும் அதெல்லாம் தனது நீண்டகால கிரிக்கெட்டின் அ... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு எதிரான தோல்விக்கு காரணம் என்ன? வங்கதேசப் பயிற்சியாளர் விளக்கம்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் தோல்வியடைந்தது குறித்து அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் விளக்கமளித்துள்ளார்.ஆசிய கோப்பை கி... மேலும் பார்க்க

41 ஆண்டுகளுக்குப் பின் இறுதியில் இந்தியாவுடன் மோதல்! - பாக். பயிற்சியாளர் கூறுவதென்ன?

ஆசியக் கோப்பைத் தொடரில் 41 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவுடன் முதல்முறையாக இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடுவது குறித்து பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெசன் கருத்து தெரிவித்துள்ளார்.ஆசிய கோப்ப... மேலும் பார்க்க