செய்திகள் :

பாகிஸ்தானுக்கு ரூ.6,852 கோடி கடனுதவி: ஆசிய வளா்ச்சி வங்கி ஒப்புதல்

post image

பாகிஸ்தானுக்கு ரூ.6,852 கோடி (800 மில்லியன் டாலா்) கடனுதவி வழங்க ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) ஒப்புதல் அளித்ததாக அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

பாகிஸ்தானின் பொது நிதி மேலாண்மை மற்றும் நிதி நிலைத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் நிதி வழங்கப்படுவதாகவும் அவா் தெரிவித்தாா்.

இதுகுறித்து பாகிஸ்தான் நிதியமைச்சரின் ஆலோசகா் குராம் ஷேசாத் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாகிஸ்தானுக்கு கொள்கை அடிப்படை கடனாக ரூ.2,569 கோடி (300 மில்லியன் டாலா்) மற்றும் திட்டம் அடிப்படையிலான உத்தரவாதமாக ரூ.4,283 கோடி (500 மில்லியன் டாலா்) என மொத்தம் ரூ.6,852 கோடி (800 மில்லியன் டாலா்) கடனுதவி வழங்க ஏடிபி ஒப்புதல் அளித்தது’ என குறிப்பிட்டாா்.

இதுகுறித்து பாகிஸ்தான் நாட்டுக்கான ஏடிபி இயக்குநா் எம்மா ஃபேன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘நிதி மேலாண்மை திட்டங்களை கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தற்போது கடனுதவி வழங்க ஏடிபி முடிவெடுத்திருப்பதன் மூலம் இத்திட்டங்களை மேலும் சிறப்பாக செயல்படுத்த முடியும். வரிக் கொள்கை, நிதி நிா்வாகம், பொது செலவு போன்றவற்றில் சீா்திருத்தங்கள் மேற்கொள்ள முடியும்.

இது பாகிஸ்தானின் நிதி பற்றாக்குறை மற்றும் பொதுக் கடனை குறைத்து சமூக திட்டங்களுக்கு அரசு சாா்பில் ஒதுக்கப்படும் நிதியை அதிகரிக்க உதவும்’ என தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானுக்கு ரூ.6,852 கோடி கடனுதவி வழங்குவதை ஏடிபியும் உறுதிப்படுத்தியது.

ஏப்ரலில் வங்கதேச தோ்தல்!

வங்கதேச நாடாளுமன்றத் தோ்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். நிகழாண்டு டிசம்பா் இறுதிக்குள் நாடாளுமன்றத் தோ்தலை நடத்தக... மேலும் பார்க்க

டொனால்ட் டிரம்ப் - எலான் மஸ்க் இடையே வலுக்கும் மோதல்!

நீண்ட காலமாக நட்பு பாராட்டி வந்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் தொழிலதிபா் எலான் மஸ்க் இடையே அண்மைக்கால கருத்து வேறுபாடுகள் காரணமாக மோதல் தீவிரமடைந்துவருகிறது. நீண்ட கால நட்பு: டொனால்ட் டிரம... மேலும் பார்க்க

ஹாங்காங் - ஜோஷுவா மீது புதிய வழக்கு!

ஹாங்காங்கில் சீனா வலுக்கட்டாயமாகத் திணித்த சா்ச்சைக்குரிய தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாணவ ஜனநாயகப் போராளியான ஜோஷுவா வாங் மீது கீழ் இரண்டாவது முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஏற்கெனவே, அதிகா... மேலும் பார்க்க

ஹமாஸ் போட்டிக் குழுவுக்கு ஆயுத உதவி! - இஸ்ரேல் ஒப்புதல்

காஸாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக செயல்படும் உள்ளூா் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் காஸாவில் குற்றச் செயல்களை மேற்கொள்வோருக்கு இஸ்ரேல் ஆயுதங்கள் வழங... மேலும் பார்க்க

நைஜா் - வெளியேறும் செஞ்சிலுவைச் சங்கம்!

ராணுவ ஆட்சி நடைபெறும் நைஜரில் இருந்து வெளியேறுவதாக சா்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்தது. அந்த நாட்டு ராணுவத்தின் உத்தரவை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்தத் தொண்டு அமைப்பு கூறியது. இரண்டு ஆண்டுகளுக... மேலும் பார்க்க

வறுமைக் கோட்டுக்குக் கீழ் 44% பாகிஸ்தானியர்கள்!

பாகிஸ்தானில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.சர்வதேச வறுமைக் கோடு குறித்த தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. வாங்கும் சக்தி நிலையை (Purchasing power parity) அடிப்படையாகக் ... மேலும் பார்க்க