செய்திகள் :

பாகிஸ்தானுடன் எப்போதும் துணை நிற்போம் - துருக்கி அதிபர்

post image

இஸ்தான்புல்: பாகிஸ்தானுடன் இன்பத்திலும் துன்பத்திலும் துணை நிற்போம் என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்திருக்கிறார்.

கடந்த சில நாள்களுக்கு முன்னர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற தீவிர சண்டையில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவை தாக்க ட்ரோன்களை பயன்படுத்தியது. பாகிஸ்தான் பயன்படுத்திய ட்ரோன்கள் துருக்கியிலிருந்து அந்நாட்டுக்கு வழங்கப்பட்டவை என்று கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம், பாகிஸ்தானுகு துருக்கி ராணுவ உதவி புரிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

எனினும், இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்த பாகிஸ்தானுக்கு விமானம் மூலம் ஆயுதங்களை அனுப்பிவைத்ததாக வெளியான செய்திக்கு துருக்கி மறுப்பு தெரிவித்தது. ஆனால், துருக்கியில் இருந்து கராச்சிக்கு 6 டி-130இ ஹொ்குலஸ் விமானங்கள் வந்ததாகக் வான்வழியாக விமானங்கள் பறப்பதைக் கண்காணிக்கும் நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு ஆதரவளித்ததால் துருக்கி இந்தியர்களின் எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது.

துருக்கிக்கு சுற்றுலா செல்வதை தவிர்ப்பதாக இந்தியர்கள் பெரும்பாலானோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு அந்நாட்டின் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் பலர், துருக்கிக்கு செல்வதற்காக முன்பதிவு செய்திருந்த விமான டிக்கெட்டுகளை ரத்து செய்துள்ளனர். அந்நாட்டு பொருள்களை வாங்க வேண்டாமெனவும் அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்புக்கு அனுப்பியுள்ள செய்தியில், பாகிஸ்தானுடன் இன்பத்திலும் துன்பத்திலும் எப்போதும் துணை நிற்போம் என்று உறுதியளித்திருக்கிறார்.

மெக்ஸிகோ: சாலை விபத்தில் 21 போ் உயிரிழப்பு

மெக்ஸிகோவில் ஏற்பட்ட சாலை விபத்தில் 21 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் பியூப்லா மாகாணத்தைச் சோ்ந்த இரு முக்கிய நகரங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி, எதிா்த் தடத்துக்கு மாறியபோ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் அணுக் கதிா்வீச்சு கசிவு இல்லை! சா்வதேச அணுசக்தி முகமை அறிவிப்பு!

பாகிஸ்தான் அணுசக்தி மையங்களில் எவ்வித அணு கதிா்வீச்சு கசிவும் ஏற்படவில்லை என்று சா்வதேச அணுசக்தி முகமை (ஐஏஇஏ) தெரிவித்துள்ளது. அண்மையில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல்... மேலும் பார்க்க

53 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனா்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: 13 லட்சம் ஆப்கன் அகதிகள் வெளியேற்றம்!

கடந்த 2023 நவம்பரில் இருந்து இதுவரை 13 லட்சம் ஆப்கன் அகதிகளை பாகிஸ்தான் அரசு வெளியேற்றியுள்ளது. இது குறித்து அந்த நாட்டு நாடாளுமன்றச் செயலா் முக்தாா் அகமது மாலிக் வியாழக்கிழமை கூறியதாவது: பாகிஸ்தானில்... மேலும் பார்க்க

இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன்களை தயாரிப்பதில் விருப்பமில்லை! - டிரம்ப்

இந்தியாவில் ஆப்பிள் ஐஃபோன்கள் தயாரிக்கப்படுவதில் விருப்பமில்லை என்று அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா். அமெரிக்க அதிபா் டிரம்ப் 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக வளைகுடா நாடுகளுக்கு சென்றுள்ளாா... மேலும் பார்க்க

இஸ்தான்புல் பேச்சுவாா்த்தையில் புதின் பங்கேற்பில்லை: ரஷியா

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெறும் பேச்சுவாா்த்தையில் தங்கள் நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் பங்கேற்கப்போவதில்லை என்று ரஷியா அறிவித்துள்ளது. இது குறித... மேலும் பார்க்க