செய்திகள் :

பாகிஸ்தான் ஆதரவாளர்கள் தமிழராக இருப்பதற்கு அருகதை அற்றவர்கள்: நயினார் நாகேந்திரன்

post image

ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைப் பாராட்டி, தமிழக பாஜக பேரணி நடத்தியது.

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடவடிக்கை வெற்றியைத் தொடர்ந்து, அதனைப் பாராட்டும் விதமாகவும், உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் தமிழக பாஜக சார்பில் பேரணி நடத்தினர்.

பேரணியைத் தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது, பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிப்போர், தமிழர் என சொல்வதற்கு அருகதை அற்றவர்களே.

நாட்டுப்பற்று இல்லாதவர்கள், பாகிஸ்தானுக்கே செல்லுங்கள். காங்கிரஸார்கூட பாகிஸ்தானை எதிர்க்கின்றனர். ஆனால், நம் முதல்வர் எதுவும் கூறவில்லை என்று தெரிவித்தார்.

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை

அவரைத் தொடர்ந்து, தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாவது, எங்கு ரத்தம் ஓடுகிறதோ அங்கு தண்ணீர் ஓடாது. அதனால்தான், பாகிஸ்தானுக்கான தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது. நாம் போரை விரும்பவில்லை என்றாலும், போருக்கு தயாராகவே உள்ளோம்.

பாகிஸ்தான் நாட்டு மக்களுக்காகத்தான், இந்தமுறை நம் பிரதமர் மன்னித்துள்ளார். இருப்பினும், அமைதியா? போரா? என்பது பாகிஸ்தான் கையில்தான் இருக்கிறது என்று கூறினார்.

பாமக நிர்வாகிகள் கூட்டம்: இன்றும் அன்புமணி ஆப்சென்ட்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெற்று வரும் பாமக நிர்வாகிகள் கூட்டத்திலும் கட்சியின் செயல் தலைவர் அன்புமணி பங்கேற்கவில்லை.தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவ... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவிலிருந்து மீண்டு மெல்ல உயரத் தொடங்கியது.காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும், காவிரியின் துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்ப் பிடிப்பு பகுதிகளிலும் மழை ப... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: மின்சாரம் பாய்ந்து கணவர் பலி; குழந்தைகளுடன் மனைவி தற்கொலை முயற்சி!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே கணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில், துக்கம் தாளாமல் மனைவி இரு குழந்தைகளோடு சேர்ந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் புதிதாய் 1.8 லட்சம் மாணவர்கள் சேர்க்கை! இலக்கை எட்டுமா பள்ளிக்கல்வித் துறை?

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையைத் தீவிரப்படுத்த பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.தமிழக பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,553 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 52 லட்சம் மா... மேலும் பார்க்க

நிதித்துறை மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

நிதித்துறை தொடர்பான 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.அவற... மேலும் பார்க்க

அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதி எம்.எல்.ஏ.வான சேவூர் எஸ். ராமச்சந்திரன் வீட்டில் சுமார் 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், 2 மணிநேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தி வருகின்றனர். அவரது மகன்க... மேலும் பார்க்க