செய்திகள் :

பாகிஸ்தான் பாடகி மீது கரடி தாக்குதல்

post image

பாகிஸ்தான் பாடகி குராத்துலைன் பலூச் மீது கரடி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பிரபல பாடகியாக அறியப்படுபவர் குராத்துலைன் பலூச். இவர் பல்டிஸ்தானில் உள்ள கிராமங்களுக்குச் சென்று வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். பின்னர், கடந்த செப்.4ஆம் தேதி தனது கூடாரத்தில் தூங்கியிருக்கிறார்.

அப்போது அங்கு வந்த பழுப்பு நிற கரடி அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த கரடியை விரட்டினர். உடனடியாக பாடகி பலூச்சை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் காயங்களிலிருந்து குணமடைந்து வருவதாகவும் அவரது குழுவைச் சேர்ந்தவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமியின் ஐந்தாம் கட்ட பிரசாரப் பயணம் செப்.17-இல் தொடக்கம்

மேலும் இந்த நேரத்தில் அவருக்கு முழு ஓய்வு மற்றும் தனிமை தேவை, எனவே அவரது அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த சம்பவத்தில் அவருக்கு எந்த எலும்பு முறிவுகளும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

The team of Pakistani singer Quratulain Balouch confirmed she is out of danger and is getting medical help following the attack by a brown bear.

செங்கடலில் ஆழ்கடல் கேபிள்கள் துண்டிப்பு: ஆசியா, மத்திய கிழக்கில் இணைய சேவை பாதிப்பு

செங்கடலில் உள்ள ஆழ்கடல் இணைய கேபிள்கள் துண்டிக்கப்பட்டதால், இந்தியா உள்பட ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இணைய சேவை பாதிக்கப்பட்டது. இஸ்ரேல்-ஹமாஸ் மோதலை முடிவுக்க... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பாலஸ்தீன அமைப்புக்கு ஆதரவாக போராட்டம்: பிரிட்டனில் 425 போ் கைது

பிரிட்டனில் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்ட ‘பாலஸ்தீன் ஆக்ஷன்’ அமைப்புக்கு ஆதரவாக லண்டனில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 425-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். போராட்டத்தின்போது, காவல் துறைய... மேலும் பார்க்க

இஸ்ரேல் மீது ஹூதிக்கள் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை நிறுத்தம்

இஸ்ரேல் மீது யேமனில் உள்ள ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஞாயிற்றுக்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தினா். இதனால் இஸ்ரேலில் விமான சேவை நிறுத்தப்பட்டது. இஸ்ரேல் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் ஏராளமான ட்ரோன்களை ஏவிய நில... மேலும் பார்க்க

ரஷியாவின் மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: உக்ரைன் அமைச்சரவைக் கட்டடம் சேதம்

உக்ரைனில் ரஷியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய மிகப் பெரிய ட்ரோன் தாக்குதலில், அந்நாட்டு தலைநகா் கீவில் உள்ள அமைச்சரவைக் கட்டடம் சேதமடைந்தது. இது அமைச்சரவைக் கட்டடம் மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதலா அல்லது... மேலும் பார்க்க

ரஷியா - இந்தியா - சீனா உறவு பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடு: ரஷிய வெளியுறவு அமைச்சா்

ரஷியா-இந்தியா-சீனா உறவானது பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடு என ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். சீனாவில் கடந்த ஆக.3... மேலும் பார்க்க

புற்றுநோய்க்கு தடுப்பூசி தயார்: ரஷிய அரசின் அனுமதிக்கு காத்திருப்பு!

‘எண்டெரோமிக்ஸ்' என்ற எம்- ஆர்என்ஏ மருத்துவ தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான புற்றுநோய் தடுப்பு மருந்து வெகுவிரைவில் பொது பயன்பாட்டுக்கு வரக்கூடும் என்று ரஷிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுந... மேலும் பார்க்க