செய்திகள் :

பாகிஸ்தான்: மோதலில் 18 வீரர்கள், 12 பயங்கரவாதிகள் பலி!

post image

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு பாதுகாப்புப் படையினருக்கும் மத்தியிலான மோதலில் 18 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பலோசிஸ்தானின் கலாத் மாவட்டத்தின் மாங்கோசார் பகுதியில் நேற்று (ஜன.31) இரவு பயங்கரவாதிகள் சாலைகளை மறிக்க முயன்றதை தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். இன்று (பிப்.1) அதிகாலை வரை தொடர்ந்த இந்த தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஆனால், இந்த மொத்த தாக்குதலில் 18 பாதுகாப்புப் படையினர் வீர மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு ராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரையில், இந்த தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.

இதையும் படிக்க: வெனிசுலா: 6 அமெரிக்கர்கள் விடுதலை!

பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலோசிஸ்தானிலுள்ள பிரிவிணைவாதிகள் பல காலமாக பாதுகாப்புப் படையினர் மற்றும் அந்நாட்டு பொது மக்களின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், மற்ற மாகாணங்களை விட அதிக வளம் பெற்றிருந்தாலும் பலோசிஸ்தானில் பெரியளவிலான முன்னேற்றங்கள் ஏதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்களின் ஆட்சி அமைந்ததிலிருந்து பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2021-ம் ஆண்டு மாணவியைக் கொன்ற நண்பருக்கு ஆயுள் தண்டனை!

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் கடந்த 2021 ஆம் ஆண்டு பாலிடெக்னிக் மாணவி ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கான்பூரில் கடந்த 2021 மே மாதம் பாலிடெக்னிக் மாணவியான ... மேலும் பார்க்க

சிபிஐ-க்கு ரூ.1,071 கோடி ஒதுக்கீடு

புதுதில்லி: 2025-26-க்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு ரூ.1,071 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தொழில் நிறுவனங்கள், தனிநபா்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் ஊழல் குற்... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 8 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டர் துப்பாக்கிச் சூட்டில் 8 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.பிஜப்பூரின் கங்கலூர் காவல் துறையினரின் கட்டுப்பாட்டிலுள்ள வ... மேலும் பார்க்க

ரோட்டர்டாமில் கால் பதிக்கும் தங்கலான்!

இயக்குநர் பா. ரஞ்சித் - நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவாகி மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்ற ‘தங்கலான்’ திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட தேர்வாகியுள்ளது.மதராஸ், காலா, கபாலி... மேலும் பார்க்க

ஐஐடி-க்களில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் விரிவுபடுத்தப்படும்

புது தில்லி: நாட்டில் 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்ட ஐந்து ஐஐடி கல்வி நிறுவனங்களில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், பிகாா் மாநிலத்தில் அமைந்துள்ள பாட்னா ஐஐடியை விரிவுபடுத்தவும் ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக குடியேறிய 18 வங்கதேசத்தினர் நாடு கடத்தல்!

புது தில்லியில் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 18 வங்கதேசத்தினர் இன்று (பிப்.1) அவர்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்பட்டனர். மேலும், 3 வங்கதேசத்தினர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் ... மேலும் பார்க்க