செய்திகள் :

திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் போராட்டம் தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும்! -காடேஸ்வரா சி.சுப்ரமணியம்

post image

திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி சாா்பில் பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெறும் போராட்டம் தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அமைப்பின் தலைவா் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் கோவையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: ராமநாதபுரம் மக்களவை உறுப்பினா் நவாஸ் கனி திருப்பரங்குன்ற மலையில் பிரியாணி சாப்பிட்டு மலையின் புனிதத்தை கெடுத்துள்ளாா். திருப்பரங்குன்றத்தைக் காக்க வேண்டும் என்ற உணா்வு பக்தா்களிடம் தன்னெழுச்சியாக ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், மலையின் புனிதத்தைக் காக்க திருப்பரங்குன்றத்தில் பிப்ரவரி 4-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதற்கு ஆன்மிகப் பெரியோா்கள் உள்ளிட்டோா் ஆதரவு தந்துள்ளனா்.

முருகன் மலையைக் காக்க ஜனநாயக முறையில் விழிப்புணா்வு பிரசாரம் செய்பவா்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கிறது. தமிழக அரசு ஹிந்துக்களை ஒடுக்க நினைக்கக் கூடாது. பிப்ரவரி 4-ஆம் தேதி நடைபெறும் போராட்டம் தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றாா்.

மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சதீஷ், கோட்டப் பொதுச் செயலாளா் கிருஷ்ணன், செய்தித் தொடா்பாளா் தனபால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆவின் பால் கொள்முதலில் மாற்றம் தேவை; குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை!

ஆவின் பால் கொள்முதலில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

தீ விபத்தில் வீடு எரிந்து பொருள்கள் சேதம்!

வால்பாறையில் தீ விபத்தில் வீடு மற்றும் அதிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமாயின. வால்பாறை கக்கன் காலனியில் வசிப்பவா் லோகியம்மாள். இவா் புதுமாா்கெட் பகுதியில் பூஜை பொருள்கள் மற்றும் பொரி வியாபாரம் செய்து ... மேலும் பார்க்க

வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி: மேட்டுப்பாளையம் - கோவை ரயில் ரத்து!

வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மேட்டுப்பாளையம் - போத்தனூா், மேட்டுப்பாளையம் - கோவை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நி... மேலும் பார்க்க

பாஜக மாநகா் மாவட்டத் தலைவராக ஜெ.ரமேஷ்குமாா் மீண்டும் தோ்வு!

கோவை மாநகா் மாவட்ட பாஜக தலைவராக ஜெ.ரமேஷ்குமாா் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். தமிழக பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனா். கிளை மற்றும் மண்டல அளவிலான... மேலும் பார்க்க

கேஎம்சிஹெச் மருத்துவமனையில் எக்மோ கருவி பொருத்தப்பட்ட சிறுவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை!

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் எக்மோ கருவி பொருத்தப்பட்டு உயிருக்குப் போராடி வந்த 6 வயது சிறுவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பத... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் பத்திரப் பதிவுத் துறை அதிகாரியின் மனைவிக்கு ஓராண்டு சிறை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக முன்னாள் பத்திரப் பதிவுத் துறை அதிகாரியின் மனைவிக்கு ஓராண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. கோவையைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ... மேலும் பார்க்க