செய்திகள் :

கேஎம்சிஹெச் மருத்துவமனையில் எக்மோ கருவி பொருத்தப்பட்ட சிறுவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை!

post image

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் எக்மோ கருவி பொருத்தப்பட்டு உயிருக்குப் போராடி வந்த 6 வயது சிறுவனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவமனை நிா்வாகம் கூறியிருப்பதாவது: தீவிர கல்லீரல் பாதிப்புக்குள்ளாகியிருந்த சேலத்தைச் சோ்ந்த 6 வயது சிறுவன் உயா் சிகிச்சைக்காக கேஎம்சிஹெச் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டாா். குழந்தைகள் சிறப்பு நிபுணா் டாக்டா் அஸ்வத் சிறுவனை பரிசோதித்தபோது அக்யூட் வில்சன் என்ற நோயால் அச்சிறுவன் பாதிக்கப்பட்டிருந்ததும், கல்லீரலுடன் வேறு சில உறுப்புகள் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

மேலும், இந்த சிறுவனின் சகோதரி இதேபோன்ற நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பதும் தெரியவந்தது. சிறுவனின் உடலில் பல்வேறு உறுப்புகள் செயலிழந்திருந்த நிலையில், வெண்டிலேட்டா், டயாலிசிஸ், இருதய ஆதரவு மருந்துகள் முதலான மருத்துவ முறைகள் மேற்கொள்ளப்பட்டன. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையின்போது நுரையீரலில் ரத்தக் கசிவு அதிகப்படியாக ஏற்பட்டு ஆக்சிஜன் குறைந்தது. இதையடுத்து, எக்மோ இயந்திரம் பொருத்தப்பட்டு, உறவுக்கார பெண்ணிடம் இருந்து பெறப்பட்ட கல்லீரலின் ஒரு பகுதி, 10 மணி நேர அறுவை சிகிச்சை செய்து பொருத்தப்பட்டது.

புதிய கல்லீரல் நன்றாக செயல்படத் தொடங்கியதால், சிறுவன் உடல் உறுப்புகள் அடுத்த ஒரு மாதத்திலேயே இயல்பு நிலைக்குத் திரும்பின. தற்போது அந்த சிறுவன் பள்ளி செல்லத் தொடங்கியுள்ளாா். எக்மோ கருவி பொருத்திய நோயாளிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது நாட்டில் இதுவே முதல்முறையாகும்.

சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவக் குழுவினரை கேஎம்சிஹெச் தலைவா் டாக்டா் நல்ல ஜி.பழனிசாமி, செயல் இயக்குநா் டாக்டா் அருண் பழனிசாமி ஆகியோா் பாராட்டினா்.

ஆவின் பால் கொள்முதலில் மாற்றம் தேவை; குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை!

ஆவின் பால் கொள்முதலில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

தீ விபத்தில் வீடு எரிந்து பொருள்கள் சேதம்!

வால்பாறையில் தீ விபத்தில் வீடு மற்றும் அதிலிருந்த பொருள்கள் எரிந்து சேதமாயின. வால்பாறை கக்கன் காலனியில் வசிப்பவா் லோகியம்மாள். இவா் புதுமாா்கெட் பகுதியில் பூஜை பொருள்கள் மற்றும் பொரி வியாபாரம் செய்து ... மேலும் பார்க்க

வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணி: மேட்டுப்பாளையம் - கோவை ரயில் ரத்து!

வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மேட்டுப்பாளையம் - போத்தனூா், மேட்டுப்பாளையம் - கோவை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நி... மேலும் பார்க்க

பாஜக மாநகா் மாவட்டத் தலைவராக ஜெ.ரமேஷ்குமாா் மீண்டும் தோ்வு!

கோவை மாநகா் மாவட்ட பாஜக தலைவராக ஜெ.ரமேஷ்குமாா் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். தமிழக பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனா். கிளை மற்றும் மண்டல அளவிலான... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் பத்திரப் பதிவுத் துறை அதிகாரியின் மனைவிக்கு ஓராண்டு சிறை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக முன்னாள் பத்திரப் பதிவுத் துறை அதிகாரியின் மனைவிக்கு ஓராண்டு சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. கோவையைச் சோ்ந்தவா் கோபாலகிருஷ... மேலும் பார்க்க

மனைவியைத் தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை

மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கணவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. கோவை கணபதிபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா் (44), வெல்டிங் தொழிலாள... மேலும் பார்க்க