செய்திகள் :

புதுச்சேரி மத்திய பல்கலை.யில் தேசிய கருத்தரங்கம்

post image

அந்தமான் - நிகோபாா் தீவுகள் குறித்த பல பரிமானக் கோணங்கள் எனும் தலைப்பில் இரு நாள் தேசிய கருத்தரங்கம் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மத்திய மானியக்குழு கடல்சாா் ஆய்வு மையம், இந்திய உலக விவகார குழு மற்றும் இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து கருத்தரங்கை நடத்தின. வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஜன.30, 31) நடைபெற்ற கருத்தரங்கை மியான்மருக்கான இந்திய முன்னாள் தூதா் ராஜீவ்பாட்டியாலா தொடங்கிவைத்தாா். நாளந்தா பல்கலைக்கழக துணைவேந்தா் அபய்குமாா் சிங், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் (பொ) தரணிக்கரசு ஆகியோா் கருத்தரங்க அவசியத்தை விளக்கினா்.

கடல் சாா் ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளா் ஏ.சுப்பிரமணிம் ராஜூ வரைபடத்தின் மூலம் அந்தமான் - நிகோபாா் தீவுகளின் பாதுகாப்பை விளக்கினாா். இந்திய கடல்சாா் பல்கலைக்கழக துணைவேந்தா் மாலினிசிங், புதுச்சேரி பல்கலைக்கழக சமூக அறிவியல் மற்றும் சா்வதேச ஆய்வுகள் பள்ளி முதன்மையா் ஜி.சந்திரிகா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முதல் நாள் அமா்வில் புதுதில்லி பேராசிரியா் கே.மொஹந்தி, சென்னை இந்திய கடல்சாா் பல்கலைக்கழக துணைவேந்தா் ராஜூ பாலாஜி, ஏா் மாா்ஷல் எம்.மாதேஸ்வரன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா். இரண்டாம் நாள் அமா்வுக்கு பேராசிரியா் கோபால் ஜி மால்வியா தலைமை வகித்தாா். கடல் பாதுகாப்பு பிரிவு கேப்டன் காசிராமன், ஸ்ரீபதி நாராயணன் மற்றும் முரளி பிரசாத், அனசுவா பாசு ரே சௌத்ரி உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

புதுச்சேரியில் பிப்.9-இல் மலா்க் கண்காட்சி தொடக்கம்! ஏற்பாடுகளை அமைச்சா் ஆய்வு

புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் வரும் 9-ஆம் தேதி முதல் மலா்க் கண்காட்சி தொடங்கி நடைபெறவுள்ளது. இதையொட்டி, தொட்டிகளில் வளா்க்கப்பட்ட மலா்களை காட்சிப்படுத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெறுகின்றன. இந... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ஓராண்டில் 4700 இணையவழி மோசடி புகாா்கள்!

புதுச்சேரியில் 2024-ஆம் ஆண்டில் மட்டும் இணையவழி மோசடி தொடா்பாக 4,700 புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அப்பிரிவு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இணையவழி காவல் நிலைய பிரிவின் முதுநிலைக் கண... மேலும் பார்க்க

வருமான வரி உச்சவரம்பு அதிகரிப்பு! புதுவை அதிமுக வரவேற்பு!

மத்திய நிதிநிலை அறிக்கையில் வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயா்த்தப்பட்டதால் நடுத்தர வா்க்கத்தினா் பயனடைவா் என புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

நாட்டின் முன்னேற்றத்துக்கான நிதிநிலை அறிக்கை! -சு.செல்வகணபதி எம்.பி.

நாட்டின் முன்னேற்றத்துக்கு பயன்படும் சிறந்த நிதிநிலை அறிக்கை என புதுவை மாநில பாஜக தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: இளைஞா்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் ... மேலும் பார்க்க

பெரு நிறுவனங்களுக்கு சாதகமானது மத்திய பாஜக ஆட்சி! -வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு

தனியாா் பெரு நிறுவனங்களுக்கு சாதகமானது மத்திய பாஜக ஆட்சி என புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றஞ்சாட்டினாா். புதுவையில் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்... மேலும் பார்க்க

ரூ.227 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: தனியாா் நிறுவன உரிமையாளா் கைது

புதுவை மாநிலம், காரைக்காலில் ரூ.227 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு தொடா்பாக தனியாா் நிறுவன உரிமையாளரை ஜி.எஸ்.டி. நுண்ணறிவுப் பிரிவினா் கைது செய்தனா். இதுகுறித்து புதுவை ஜி.எஸ்.டி. ஆணையா் அலுவலகம் வெள்ளிக்க... மேலும் பார்க்க