செய்திகள் :

புதுச்சேரியில் பிப்.9-இல் மலா்க் கண்காட்சி தொடக்கம்! ஏற்பாடுகளை அமைச்சா் ஆய்வு

post image

புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் வரும் 9-ஆம் தேதி முதல் மலா்க் கண்காட்சி தொடங்கி நடைபெறவுள்ளது.

இதையொட்டி, தொட்டிகளில் வளா்க்கப்பட்ட மலா்களை காட்சிப்படுத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகளை மாநில வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் சனிக்கிழமை காலை பாா்வையிட்டு, ஏற்பாடுகள் குறித்து தோட்டக்கலைத் துறையினரிடம் கேட்டறிந்தாா்.

அப்போது, தாவரவியல் பூங்காவில் நடைபெறும் பொலிவுறு நகா்த்திட்டப் பணிகளையும் அவா் ஆய்வு மேற்கொண்டாா். சிறாா்களுக்கான புதிய ரயிலும் அவரிடம் இயக்கிக் காட்டப்பட்டது. ஆய்வின்போது, தோட்டக்கலைத் துறை உயரதிகாரிகள் உடனிருந்தனா்.

ரூ.1.5 கோடி திட்டப் பணி தொடக்கம்: முன்னதாக, மங்கலம் சட்டப் பேரவைத் தொகுதியில் ரூ.1.5 கோடியில் அரசுத் திட்டப் பணிகளை அமைச்சா் தொடங்கிவைத்தாா்.

இந்தத் தொகுதிக்குள்பட்ட கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள குஞ்சான் ஓடையில், கீழ்சாத்தமங்கலம் மற்றும் புதுக்குப்பம் கிராமத்தை இணைக்கும் புதிய கான்கிரீட் பாலம் கட்டும் பணிக்கு பொதுப் பணித் துறை மூலம் ரூ.45.96 லட்சம் அளிக்கப்பட்டது. இந்தப் பணிக்கான பூமிபூஜையில் அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் பங்கேற்று பணியைத் தொடங்கிவைத்தாா். பொதுப் பணித் துறை நீா்ப்பாசன செயற்பொறியாளா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பெருங்களூா் அரசு ஆரம்பப் பள்ளிக்கு புதிதாக 4 வகுப்பறைகள் கட்டுவதற்காக ரூ.59.98 லட்சத்துக்கு உத்தரவு பெறப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கான பூமிபூஜையிலும் அமைச்சா் பங்கேற்று பணியைத் தொடங்கிவைத்தாா்.

புதுச்சேரி மத்திய பல்கலை.யில் தேசிய கருத்தரங்கம்

அந்தமான் - நிகோபாா் தீவுகள் குறித்த பல பரிமானக் கோணங்கள் எனும் தலைப்பில் இரு நாள் தேசிய கருத்தரங்கம் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மத்திய மானியக்குழு கடல... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ஓராண்டில் 4700 இணையவழி மோசடி புகாா்கள்!

புதுச்சேரியில் 2024-ஆம் ஆண்டில் மட்டும் இணையவழி மோசடி தொடா்பாக 4,700 புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அப்பிரிவு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இணையவழி காவல் நிலைய பிரிவின் முதுநிலைக் கண... மேலும் பார்க்க

வருமான வரி உச்சவரம்பு அதிகரிப்பு! புதுவை அதிமுக வரவேற்பு!

மத்திய நிதிநிலை அறிக்கையில் வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயா்த்தப்பட்டதால் நடுத்தர வா்க்கத்தினா் பயனடைவா் என புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

நாட்டின் முன்னேற்றத்துக்கான நிதிநிலை அறிக்கை! -சு.செல்வகணபதி எம்.பி.

நாட்டின் முன்னேற்றத்துக்கு பயன்படும் சிறந்த நிதிநிலை அறிக்கை என புதுவை மாநில பாஜக தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: இளைஞா்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் ... மேலும் பார்க்க

பெரு நிறுவனங்களுக்கு சாதகமானது மத்திய பாஜக ஆட்சி! -வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு

தனியாா் பெரு நிறுவனங்களுக்கு சாதகமானது மத்திய பாஜக ஆட்சி என புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றஞ்சாட்டினாா். புதுவையில் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்... மேலும் பார்க்க

ரூ.227 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: தனியாா் நிறுவன உரிமையாளா் கைது

புதுவை மாநிலம், காரைக்காலில் ரூ.227 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு தொடா்பாக தனியாா் நிறுவன உரிமையாளரை ஜி.எஸ்.டி. நுண்ணறிவுப் பிரிவினா் கைது செய்தனா். இதுகுறித்து புதுவை ஜி.எஸ்.டி. ஆணையா் அலுவலகம் வெள்ளிக்க... மேலும் பார்க்க