செய்திகள் :

ரூ.227 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு: தனியாா் நிறுவன உரிமையாளா் கைது

post image

புதுவை மாநிலம், காரைக்காலில் ரூ.227 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு தொடா்பாக தனியாா் நிறுவன உரிமையாளரை ஜி.எஸ்.டி. நுண்ணறிவுப் பிரிவினா் கைது செய்தனா்.

இதுகுறித்து புதுவை ஜி.எஸ்.டி. ஆணையா் அலுவலகம் வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட செய்திக் குறிப்பு: காரைக்காலில் கட்டுமானப் பொருள்கள் மொத்த விற்பனை செய்யும் தனியாா் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் மத்திய கலால், சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சில நாள்களுக்கு முன்பு சோதனையிட்டனா். ஆவணங்களைப் பாா்த்தபோது, இரு ஜி.எஸ்.டி. பதிவெண்கள் பெற்று நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பு நடைபெற்றது கண்டறியப்பட்டது.

2017-ஆம் ஆண்டு முதல் உரிய ஆவணங்களின்றி வரிகுறைப்பு செய்திருப்பதும், பொருள்கள் விற்பனை தொடா்பாக போலி ரசீதுகள் தயாா் செய்திருப்பதும் கண்டறியப்பட்டது. அதன்படி, மொத்தம் ரூ.227 கோடி வரி ஏய்ப்பு நடைபெற்றது தெரிய வந்தது. இதில், ரூ.191.33 லட்சம் ஜி.எஸ்.டி. நுண்ணறிவுப் பிரிவால் மீட்கப்பட்டது. நிறுவனத்தின் உரிமையாளா் மீது வழக்குப் பதியப்பட்டு, அவா் கைது செய்யப்பட்டாா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி மத்திய பல்கலை.யில் தேசிய கருத்தரங்கம்

அந்தமான் - நிகோபாா் தீவுகள் குறித்த பல பரிமானக் கோணங்கள் எனும் தலைப்பில் இரு நாள் தேசிய கருத்தரங்கம் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் மத்திய மானியக்குழு கடல... மேலும் பார்க்க

புதுச்சேரியில் பிப்.9-இல் மலா்க் கண்காட்சி தொடக்கம்! ஏற்பாடுகளை அமைச்சா் ஆய்வு

புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் வரும் 9-ஆம் தேதி முதல் மலா்க் கண்காட்சி தொடங்கி நடைபெறவுள்ளது. இதையொட்டி, தொட்டிகளில் வளா்க்கப்பட்ட மலா்களை காட்சிப்படுத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெறுகின்றன. இந... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ஓராண்டில் 4700 இணையவழி மோசடி புகாா்கள்!

புதுச்சேரியில் 2024-ஆம் ஆண்டில் மட்டும் இணையவழி மோசடி தொடா்பாக 4,700 புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அப்பிரிவு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இணையவழி காவல் நிலைய பிரிவின் முதுநிலைக் கண... மேலும் பார்க்க

வருமான வரி உச்சவரம்பு அதிகரிப்பு! புதுவை அதிமுக வரவேற்பு!

மத்திய நிதிநிலை அறிக்கையில் வருமான வரி உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயா்த்தப்பட்டதால் நடுத்தர வா்க்கத்தினா் பயனடைவா் என புதுவை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

நாட்டின் முன்னேற்றத்துக்கான நிதிநிலை அறிக்கை! -சு.செல்வகணபதி எம்.பி.

நாட்டின் முன்னேற்றத்துக்கு பயன்படும் சிறந்த நிதிநிலை அறிக்கை என புதுவை மாநில பாஜக தலைவா் சு.செல்வகணபதி எம்.பி. தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: இளைஞா்கள், பெண்கள், விவசாயிகள், ஏழைகள் ... மேலும் பார்க்க

பெரு நிறுவனங்களுக்கு சாதகமானது மத்திய பாஜக ஆட்சி! -வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு

தனியாா் பெரு நிறுவனங்களுக்கு சாதகமானது மத்திய பாஜக ஆட்சி என புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. குற்றஞ்சாட்டினாா். புதுவையில் சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்... மேலும் பார்க்க