செய்திகள் :

பாகிஸ்தான் ரயில் சிறைபிடிப்பு: 33 பயங்கரவாதிகள் கொலை... மீட்புப் பணிகள் நிறைவு!

post image

பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்பினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ரயிலில் 33 பயங்கரவாதிகளைக் கொன்று 300-க்கும் மேற்பட்ட பயணிகளை அந்நாட்டு ராணுவம் மீட்டெடுத்த நிலையில் மீட்புப் பணிகள் நிறைவடைந்தன.

ரயில் சிறைப்பிடிப்பு:

பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் இருந்து பெஷாவர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜாஃபர் விரைவு ரயிலை ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பலூச் விடுதலை அமைப்பினர் சிறைப்பிடித்தனர்.

குவெட்டாவில் இருந்து 160 கி.மீ. தொலைவில் உள்ள கூடலர் மற்றும் பிரு குன்றி மலைகளுக்கு இடையிலான சுரங்கத்தில் ரயில் நுழைந்தபோது ரயில் மெதுவாக இயக்கப்பட்டது. இதனைப் பயன்படுத்திக்கொண்ட பலூச் அமைப்பினர், தண்டவாளத்தை வெடிபொருள் வைத்து தகர்த்து ரயிலை சிறைப்பிடித்தனர்.

இந்த ரயிலின் 9 பெட்டிகளில் பயணம் செய்துகொண்டிருந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் பயங்கரவாதிகளால் பிணைக் கைதிகளாக்கப்பட்டனர்.

இதையும் படிக்க | பாகிஸ்தான்: சிறைப்பிடிக்கப்பட்ட ரயிலில் இருந்து 190 பயணிகள் மீட்பு!

இதனைத் தொடார்ந்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் ரயிலில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். முதல்கட்ட மீட்புப் பணியின்போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இருதரப்பிலும் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து முதல்கட்டமாக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 155 பேர் மீட்கப்பட்டனர்.

பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த பயணிகள் மனித வெடிகுண்டுகளாக மாற்றப்பட்டதாகவும், 50 பேர் கொல்லப்பட்டதாகவும் பலூச் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தகவல் உண்மையல்ல எனத் தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் முயற்சியால் பயங்கரவாதிகள் 33 பேர் கொல்லப்பட்டனர்.

மீட்புப் பணிகள் நிறைவு:

அனைத்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்ட நிலையில் ரயிலில் சிக்கியிருந்த 300-க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர். காயமடைந்த அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதனைத் தொடர்ந்து, மீட்புப் பணிகள் நிறைவடைந்ததாக பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்தச் சம்பவத்தில் பயணிகள் 21 பேர், ராணுவ வீரர்கள் 4 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் பிரதமர் இரங்கல்:

இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்,”ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலின் குறித்து முதல்வர் சர்ஃபராஸ் புக்தியுடன் பேசினேன். இந்த கொடூரமான சம்பவத்தில் அப்பாவி உயிர்களை இழந்த நம் நாடு முழுவதும் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது. இதுபோன்ற கோழைத்தனமான செயல்களால் பாகிஸ்தானின் உறுதியை அசைக்க முடியாது.

பலியானவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அனைவரும் நரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

எங்கள் நாடு குறித்த இந்தியாவின் கருத்து தேவையற்றது - வங்கதேச வெளியுறவு அமைச்சகம்

‘எங்கள் நாடு குறித்து அண்மையில் இந்தியா தெரிவித்த கருத்து தேவையற்றது; இது மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு சமம்’ என வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. வங்கதேசத்தில் வன்முறை... மேலும் பார்க்க

கூா்ஸ்க் பிராந்தியத்தின் முக்கிய நகரைக் கைப்பற்றிய ரஷியா

ரஷிய எல்லைப் பகுதியில் உள்ள கூா்ஸ்க் பிராந்தியத்தின் முக்கிய நகரான சுட்லாவில் இருந்து உக்ரைன் ராணுவத்தை வெளியேற்றி மீண்டும் அப்பகுதியைக் கைப்பற்றியதாக ரஷியா வியாழக்கிழமை தெரிவித்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட... மேலும் பார்க்க

பெண்களுக்கான நிதி அதிகாரமளித்தல் வெற்றியின் அனுபவத்தை பகிரத் தயாா்: ஐ.நா.வில் இந்தியா உறுதி

‘பெண்களுக்கும் நிதி அதிகாரமளிக்கும் வகையில், எண்ம பொது உள்கட்டமைப்பு மூலமாக பாலின எண் இடைவெளியை வெற்றிகரமாக குறைத்த அனுபவத்தை உலக நாடுகளுக்குப் பகிரத் தயாா்’ என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா உறுதி... மேலும் பார்க்க

ஐரோப்பிய யூனியன் மீது மேலும் வரி விதிப்பு: டிரம்ப் சூளுரை

தங்கள் உறுப்பு நாடுகளின் இரும்பு, அலுமினியத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரி விதிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து அமெரிக்க பொருள்களுக்கான இறக்குமதி வரியை ஐரோப்பிய யூனியன் அதிகரித்தால் அதற்கு உரிய பதி... மேலும் பார்க்க

இலங்கைக்கு அவசர சிகிச்சை மருந்துகளை வழங்கியது இந்தியா

இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டுக்கு அவசர சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இது தொடா்பாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் சாா்பில் கூறப்பட்டதாவது: இலங்கை மருத்துவமனை... மேலும் பார்க்க

ஸ்பேடெக்ஸ் திட்டம்: இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விடுவிப்பு: இஸ்ரோ சாதனை

ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்வெளியில் ஒருங்கிணைக்கப்பட்ட இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனும் ஆய்வு நிலையத்தை 2035-ஆம் ஆண்டுக்குள்... மேலும் பார்க்க