செய்திகள் :

பாகிஸ்தான் ராணுவத் தளபதியை டிரம்ப் சந்திப்பது இந்தியாவுக்கு அவமானம்! காங்கிரஸ்

post image

பாகிஸ்தான் ராணுவத் தளபதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை சந்திப்பது இந்தியாவுக்கு அவமானம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி 35 நிமிடங்கள் இன்று தொலைபேசியில் பேசியதாகவும், உரையாடலின் போது, ​​வர்த்தக ரீதியான எந்த மத்தியஸ்தமும் நடைபெறவில்லை. பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதாலே மோதல் கைவிடப்பட்டது. இந்தப் போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியதாகவும் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்காவுக்கு 5 நாள்கள் சுற்றுப்பயணமாக சென்றுள்ள பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீரை இன்று(ஜூன் 18) வெள்ளை மாளிகையில் சந்திக்கும் அதிபர் டிரம்ப், அவருடன் மதிய உணவு விருந்தில் ஈடுபடுவார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஜெயராம் ரமேஷ் பேசியதாவது:

“கடந்த 37 நாள்களாக பிரதமர் நரேந்திர மோடி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். இன்று டிரம்ப்புடன் 35 நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகிறது. டிரம்ப்பிடம் பேசியது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையும் இதுதொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், இரண்டிலும் வேறுபாடு உள்ளது.

அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை, நாங்கள் மத்தியஸ்தத்தை நிராகரிக்கிறோம் என்று டிரம்பிடம் மோடி கூறியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 37 நாள்களாக அமைதியாக இருந்தவர் டிரம்ப்பிடம் இதை சொன்னதாக நம்மை நம்பச் சொல்கிறார்கள். உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பிரதமரால் ஏன் அழைக்க முடியாது? வெளியுறவு செயலர் சொன்னதை எதிர்க்கட்சித் தலைவர்களிடம் நேரடியாகச் சொல்லுங்கள்.

பஹல்காம் பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிருக்கும் இடையேயான நேரடி தொடர்பை டிரம்ப்பிடம் மோடி கூறியிருக்க வேண்டும். அசிம் முனிர் கருத்தின் பிரதிபலிப்பாக பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தற்போது அதே நபரை அமெரிக்க அதிபர் மதிய உணவுக்கு அழைத்திருப்பது இந்தியாவுக்கான அவமானம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க : பாகிஸ்தான் ராணுவத் தளபதியைச் சந்திக்கும் டிரம்ப்! பின்னணி என்ன?

ஹைதராபாத் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஹைதரபாத்திலுள்ள பேகம்பேட் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அது போலியானது என உறுதியாகியுள்ளது. பேகம்பேட் விமான நிலையத்தின் வளாகத்தினுள் வெ... மேலும் பார்க்க

கரோனா பரவல்: மகாராஷ்டிரத்தில் 61 புதிய பாதிப்புகள் உறுதி!

மகாராஷ்டிர மாநிலத்தில் புதியதாக 61 பேருக்கு கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தற்போது கரோனா தொற்றானது மீண்டும் பரவி ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் நக்சல் முகாம் தகர்ப்பு! வெடிகுண்டுகள் பறிமுதல்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைந்திருந்த நக்சல்களின் முகாம் தகர்க்கப்பட்டு 14 நவீன வெடிகுண்டுகள் மற்றும் 50 கிலோ அளவிலான வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேற்கு சிங்பம் மாவட்டத்தின் சிட்பில் கிர... மேலும் பார்க்க

ஹரியாணாவில் மாடல் அழகி கொலை! காரணம் என்ன?

ஹரியாணாவின் பானிபட் கால்வாயில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஹரியாணாவைச் சேர்ந்த மாடல் அழகியின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹரியாணாவின், பானிபட் பகுதியைச் சேர்ந்தவர் மாடல் அழக... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை: ராஜஸ்தானில் முன்கூட்டியே தொடங்கியது!

ராஜஸ்தான் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் முன்னதாகவே தொடங்கியுள்ளதாக, அம்மாநில வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை... மேலும் பார்க்க

சென்னையில் 2 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!

சென்னை - தில்லி இடையேயான 2 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத் - லண்டன் இடையேயான ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதைய... மேலும் பார்க்க