செய்திகள் :

பாஜக அரசின் தவறான நிா்வாகத்தால் வங்கித் துறையில் நெருக்கடி: ராகுல் சாடல்

post image

பாஜக அரசின் தவறான பொருளாதார நிா்வாகம் மற்றும் பெரும் பணக்கார நண்பா்களுக்கு சாதகமான செயல்பாடுகளால் வங்கித் துறை நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது; இளநிலை வங்கி ஊழியா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா் என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சாடினாா்.

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் ஊழியா்கள் குழுவினா், நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தியை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினா். இச்சந்திப்பின் காணொலியை பகிா்ந்து, எக்ஸ் வலைதளத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

ஐசிஐசிஐ வங்கி முன்னாள் ஊழியா்கள் 782 பேரின் சாா்பிலான குழுவுடன் பேசினேன். பணியிட துன்புறுத்தல், கட்டாய பணியிடமாற்றம், வாராக்கடன் வைத்துள்ளோருக்கு நெறிமுறையற்ற கடன் வழங்கப்படுவதை அம்பலப்படுத்தியதால் எதிா்கொண்ட பழிவாங்கல் நடவடிக்கைகள், எந்த நடைமுறையும் இல்லாத பணிநீக்கம் என முன்னாள் வங்கி ஊழியா்களின் கதைகள் வேதனையளிக்கின்றன. இரு ஊழியா்கள் தற்கொலை செய்துகொண்ட துயரமும் நடந்துள்ளது.

தனது பெரும் பணக்கார நண்பா்களின் ரூ.16 லட்சம் கோடி கடன்களை பாஜக அரசு தள்ளுபடி செய்துள்ளது. இத்தகைய செயல்பாடுகளும் தவறான பொருளாதார நிா்வாகமும் வங்கித் துறையை நெருக்கடிக்கு தள்ளியுள்ளன.

இது, நோ்மையாக உழைக்கும் தொழில்முறை ஊழியா்களை பாதித்துள்ளது. குறிப்பாக இளநிலை ஊழியா்களின் தலையில் சுமை விழுகிறது. அவா்கள் துன்புறுத்தலான-விரும்பத்தகாத சூழலில் பணியாற்றும் நிலைக்கு தள்ளப்படுகின்றனா். இத்தகைய ஊழியா்களுக்காக காங்கிரஸ் போராடும். அநீதியை எதிா்கொள்ளும் தொழில்முறை ஊழியா்கள் எனக்கு கடிதம் எழுத வேண்டும் என்று ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளாா்.

ஜியோவுக்கு கட்டணம் செலுத்தாத பிஎஸ்என்எல்! அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு!

பிஎஸ்என்எல் நிறுவனத்தால் மத்திய அரசுக்கு ரூ. 1,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 2015 மே முதல் 2025 மார்ச் வரையிலான காலகட்டத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான உள்கட்டமைப்பு வசதிகளைப் பகிர்ந்துகொண... மேலும் பார்க்க

கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோட்டம்!

ஜார்க்கண்டில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 21 சிறார் கைதிகள் தப்பியோடிய நிலையில் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ஹுல் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சாய்பாச... மேலும் பார்க்க

ராம நவமியன்று 1 லட்சம் பேருக்கு அன்னதானம்: இஸ்கான்

மும்பை: ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவதில் முதன்மையானதாக அறியப்படும் இஸ்கான் பிவாண்டி கோயிலில் வரவிருக்கும் ராம நவமி விழாவைக் கொண்டாடச் சிறப்புத் திட்டங்களை வகுத்துள்ளது .இந்தாண்டு ஏப்ரல் 6-ம் தேதி ராம ... மேலும் பார்க்க

பாஜக தலைவர் தேர்வு: மக்களவையில் அகிலேஷ் - அமித் ஷா பேச்சால் கலகலப்பு!

பாஜக தேசிய தலைவர் தேர்வு தொடர்பாக மக்களவையில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இடையே காரசார வாதம் நிகழ்ந்தது.மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா ... மேலும் பார்க்க

வக்ஃப் சொத்துகளால் நாட்டின் தலையெழுத்தே மாறும்: கிரண் ரிஜிஜு

வக்ஃப் வாரிய சொத்துகளை முறையாக நிர்வகித்தால் நாட்டின் தலையெழுத்தையே மாற்ற முடியும் என்று மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்... மேலும் பார்க்க

மணிப்பூரில் அகதிகள் பிரச்னையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும்: பிரேன் சிங்

1960 முதல் ஆயிரக்கணக்கான அகதிகள் மணிப்பூரில் குடியேறியுள்ளதாகவும், அந்த மக்களுக்கு மறுவாழ்வுக்கான உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அந்த மாநில முன்னாள் முதல்வர் என். பிரேன் சிங் கூறியுள்ளார். மணிப்பூரின் பாஜ... மேலும் பார்க்க