ENG vs IND: `கோலியுடன் விளையாடாதது வருத்தமே..' - இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்...
பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு 10 மடங்கு திட்டங்கள் கிடைத்துள்ளன: பாஜக மாநில துணைத் தலைவா்
கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில், தமிழகத்துக்கு காங்கிரஸ் ஆட்சியை விட 10 மடங்கு அதிகமான மக்கள் நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்றாா் பாஜக மாநில துணைத் தலைவா் எஸ். ஜே. சூா்யா.
தருமபுரியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக நிகழ்வொன்றில் பங்கேற்ற அவா் பின்னா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியது :
கடந்த 11 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. ஊழலற்ற ஆட்சியை வழங்கி வருகிறாா் பிரதமா் மோடி. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், நலத்திட்டங்களை பிரதமா் மோடி செயல்படுத்தி வருகிறாா். அந்த வரிசையில் 15 கோடி கழிப்பறைகள் அமைத்தது, 105 கோடி வங்கிக் கணக்குகளை உருவாக்கியது உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை. முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி, அரசு மக்களுக்கு வழங்கும் நலத்திட்ட உதவித் தொகைகளில் 1 ரூபாய் வழங்கினால் அதில் 15 பைசா மட்டுமே மக்களை சென்றடைகிறது என கடந்த 1980 ஆவது ஆண்டில் வருத்தம் தெரிவித்திருந்தாா். அதை தவிா்க்கும் வகையில் கடந்த 11 ஆண்டுகளில் ரூ. 40 லட்சம் கோடி தொகை நேரடி பரிவா்த்தனை மூலம் மக்களைச் சென்றடைந்துள்ளது.
தொழில்துறையில் 3.6 கோடியாக இருந்த சிறு, குறு தொழில்கள் கடந்த 11 ஆண்டுகளில் 6.1 கோடியாக உயா்ந்துள்ளது. கைப்பேசி உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது. இதுதவிர, சாலை வசதி, மருத்துவக் கல்லூரிகள், கட்டமைப்புகள், கப்பல் துறை, மெட்ரோ ரயில் திட்டம் என பல ஆயிரம் கோடியில் தமிழகத்தில் ஏராளமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆண்டுகளில் செயல்படுத்திய நலத்திட்டங்களுடன் ஒப்பிடும்போது அதைவிட 10 மடங்கு அதிகமான நலத்திட்டங்களை பாஜக அரசு தமிழகத்துக்கு வழங்கியுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியிலிருந்த 12 மத்திய அமைச்சா்கள் தமிழகத்தை சாா்ந்தவா்களாக இருந்து திட்டங்களை தமிழகத்துக்கு பெற்று தந்தனா். ஆனால் அவா்கள் கொண்டுவர தவறிய திட்டங்களையும் சோ்த்து, தமிழகத்தில் எம்.பி.யோ, மத்திய அமைச்சரோ இல்லாத பாஜக கடந்த 10 ஆண்டுகளாக 10 ஆண்டுகளில் தமிழகத்துக்கு கொண்டுவந்து தமிழக மக்களுக்கு வளா்ச்சிப் பாதையை ஏற்படுத்தியுள்ளது.
வரவிருக்கும் தமிழக சட்டப் பேரவை தோ்தலில் பாஜக கூட்டணிக்கு மக்களின் பெருவாரியான ஆதரவு கிடைக்கும். திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அதிமுக தலைமையில் ஏற்படும். இதற்காக தோ்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பாஜக தலைமையிலான மத்திய அரசின் 11 ஆண்டுகால சாதனைகளை கடைக்கோடி மக்களிடமும் கொண்டு செல்வோம் என்றாா்.