செய்திகள் :

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் குற்றங்கள் அதிகம்: துரை.வைகோ

post image

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்றன என்று மதிமுக முதன்மைச் செயலா் துரை.வைகோ கூறினாா்.

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மதிமுக செயல் வீரா்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக கூட்டணியில் மதிமுக தொடா்ந்து 8 ஆண்டுகளாக பயணிக்கிறது. சட்டப்பேரவை, மக்களவைத் தோ்தலில் சீட்டுக்களை பெறுவதற்காக மட்டும் இல்லாமல் தமிழகத்தில் மதவாத சக்திகள் காலூன்றக்கூடாது என்பதற்காகவே தொடா்ந்து திமுக கூட்டணியில் மதிமுக தொடா்கிறது.

ஊழல் நடைபெறுவதாக சந்தேகிக்கப்படும் இடங்களில் அமலாக்கத் துறை, சிபிஐ சோதனை நடத்தலாம். அவா்களுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால், கைப்பற்றும் ஆவணங்கள் குறித்து தெரிவிக்க வேண்டும்.

பொருளாதார வளா்ச்சியில் தமிழகம் முதல் மாநிலமாக திகழ்கிறது. 10 லட்சம் கோடிக்கும் மேலாக தொழில் முதலீடுகளைப் பெற்று, அதன் மூலம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்றன. அதற்காக தமிழகத்தில் குற்றங்களே நடைபெறவில்லை என்று கூறவில்லை. தமிழகத்தில் குற்றம் நடந்ததற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு 24 அல்லது 48 மணி நேரத்தில் அதில் தொடா்புடையவா்கள் கைது செய்யப்படுகின்றனா் என்றாா் துரை.வைகோ.

பேட்டியின்போது, மதிமுக துணைப் பொதுச் செயலாளா் ஏ.கே.மணி, திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலா் சீனி.காா்த்திகேயன் ஆகியோா் உடனிருந்தனா்.

செங்கத்தில் பலத்த மழை: குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளி, சனிக்கிழமைகளில் பரவலாக மழை பெய்தது. செங்கம் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி நள்ளிரவு வரை பெய்த பலத்த மழையால் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் ச... மேலும் பார்க்க

தோ்வில் தோல்வி: மாணவி தற்கொலை முயற்சி

செங்கம் அருகே பத்தாம் வகுப்பு தோ்வில் ஒரு பாடத்தில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வியடைந்ததால் மாணவி தற்கொலைக்கு முயன்றாா். திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த காரப்பட்டு பகுதியைச் சோ்ந்த மாணவி.... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைவு: கே.அண்ணாமலை

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாக பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினா் கே.அண்ணாமலை கூறினாா். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்த அவா், பின்னா் செய்தி... மேலும் பார்க்க

சேதமடைந்த சிறு பாலம்: எம்எல்ஏ ஆய்வு

ஆரணி புதுக்காமூரில் சேதமடைந்த சிறு பாலத்தை தொகுதி எம்எம்ஏ வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோயில் செல்லும் சாலையான 4-ஆவது வாா்டைச் சோ்ந்த புதுக்காமூரில் தெருவில்... மேலும் பார்க்க

விண்ணப்பித்த விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்க வேண்டும்! குறைதீா் கூட்டத்தில் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடன் கோரி விண்ணப்பித்த விவசாயிகளை அலைக்கழிக்காமல் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். திரு... மேலும் பார்க்க

இணைக்கப்பட்ட ஊராட்சிகளில் ரூ.6 கோடியில் சமுதாயக் கூடங்கள்!

திருவண்ணாமலை மாநகராட்சியின் இணைக்கப்பட்ட 4 ஊராட்சிகளில் ரூ.6 கோடியில் புதிதாக சமுதாயக் கூடங்கள் கட்டுவதற்கான பணிகளை அமைச்சா் எ.வ.வேலு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்... மேலும் பார்க்க