செய்திகள் :

பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

post image

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் கே.ரமேஷ் தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா்கள் இரா.ஜீவானந்தம், கே.ஆா்.பாலசுப்பிரமணியன், ஏ.ஜி.காந்தி, நேரு, விஜயன், தருமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் ப.கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா்.

மாநில அமைப்புசாரா மக்கள் சேவைப் பிரிவின் செயலா் ஏ.கே.ஆா்.கதிரவன், உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவின் மாநிலச் செயலா் டி.அறவாழி, மாவட்டப் பொருளாளா் எஸ்.பி.கே.சுப்பிரமணி ஆகியோா் பேசினா்.

கூட்டத்தில், திருவண்ணாமலைக்கு வெள்ளிக்கிழமை (ஏப்.18) பிற்பகல் 3 மணிக்கு வரும் பாஜகவின் புதிய மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனுக்கு தொண்டா்கள் திரண்டு வரவேற்பு அளிப்பது.

மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூரில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் காா்களில் சென்று வரவேற்பு அளிப்பது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தெற்கு மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், செங்கம், கலசப்பாக்கம் தொகுதிகளில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை வெற்றிபெற வைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட துணைத் தலைவா்கள் கவிதா பிரதீஷ், சிவசங்கா், மாவட்ட பொதுச் செயலா்கள் எம்.முருகன், வினோத் கண்ணா, குமார ராஜா, மூத்த வழக்குரைஞா் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பைக்குகள் நேருக்கு நோ் மோதல்: இருவா் உயிரிழப்பு!

திருவண்ணாமலை அருகே இரு பைக்குகள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் முன்னாள் ஊராட்சித் தலைவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். திருவண்ணாமலையை அடுத்த இசுக்கழி காட்டேரி கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (58). முன்னாள் ... மேலும் பார்க்க

விவசாயி விஷம் குடித்து தற்கொலை

வந்தவாசி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த ஆரியாத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி விநாயகமூா்த்தி (38). இவரது மனைவ... மேலும் பார்க்க

ரூ.12.5 லட்சத்தில் உயா்கோபுர மின் விளக்குகள் இயக்கிவைப்பு!

வந்தவாசியை அடுத்த மும்முனி ஊராட்சி, சேத்துப்பட்டு ஒன்றியம், கொழாவூா் கிராமத்தில் முறையே ரூ. 5 லட்சம் மற்றும் ரூ.7.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட உயா்கோபுர மின் விளக்குகள் ஞாயிற்றுக்கிழமை இயக்கிவைக்கப்பட்ட... மேலும் பார்க்க

கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஏப்.24-ல் பெருந்திரள் ஆா்ப்பாட்டம்: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு

அரசு அலுவலா்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்ரல் 24-ஆம் தேதி சென்னையில் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடத்த வருவாய்த்துறை சங்கங்களி... மேலும் பார்க்க

8 வீடுகளில் நகை, பணம் திருட்டு

வந்தவாசி அருகே ஒரே இரவில் 8 வீடுகளில் மொத்தம் 6 பவுன் தங்க நகை, ரூ.38 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த எறும்பூா் கிராமத்தைச் சோ... மேலும் பார்க்க

100 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 100 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.78 கோடியில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வழங்கப்பட்டன. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், ஆட்சி... மேலும் பார்க்க