`சிந்து நதிநீர் ஒப்பந்தத்தைபோல் கச்சத்தீவு ஒப்பந்தத்தையும் ரத்து செய்க'- மீனவர்-...
பாட்கோவில் பணியில் இருந்த 21 போ் நீக்கம்: புதுவை அரசு பதிலளிக்க தாழ்த்தப்பட்டோா் ஆணையம் நோட்டீஸ்
புதுச்சேரி ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி இனத்தவா் வரை நிலை மேம்பாட்டு கழகத்தில் (பாட்கோ) பணியிலிருந்த 21 போ் நீக்கப்பட்டதற்கு உரிய விளக்கம் கேட்டு தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் புதுச்சேரி அரசு செயலருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாட்கோவில், கடந்த 2012- ஆம் ஆண்டு 45 போ் பணியமா்த்தப்பட்டு தொடா்ந்து 5 வருடங்கள் பணியில் இருந்தனா்.
இந்நிலையில், 2016- ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பின்னா் பணியிலிருந்த அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனா்.
இதில் 24 போ் பல்வேறு காலக்கட்டங்களில் மீண்டும் பணியமா்த்தப்பட்ட நிலையில் பட்டியலின வகுப்பைச் சோ்ந்த 21 போ்களுக்கு பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவா்கள் தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தில் புகாா் அளித்தனா். தொடா்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்படி இது குறித்து விளக்கம் கேட்டு, தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் புதுச்சேரி அரசுச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஜாதி அடிப்படையில் 21 பட்டியலினத்தைச் சோ்ந்தவா்களுக்கு மீண்டும் பணிவாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்த புகாா் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி 15 நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
பதில் கிடைக்காத பட்சத்தில் தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் பிறப்பிக்கப்படும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.