செய்திகள் :

`பாதிக்கப்பட்ட பெண்களைப் புண்படுத்தும் கருத்துகள்' - அலகாபாத் நீதிமன்றத்தை விளாசிய உச்ச நீதிமன்றம்!

post image

நாட்டின் மிகப் பழமையான நீதிமன்றங்களுள் ஒன்றான அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இருந்து வெளிப்படும் சமீபத்திய அவதானிப்புகள் பலவும் பெண்கள் மீது உணர்வில்லாத கண்ணோட்டத்தைப் பிரதிபலிப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

கடந்த சில மாதங்களில் அலகாபாத் நீதிமன்றத்தின் பல தீர்ப்புகள் மற்றும் கருத்துகள் விமர்சனங்களை எதிர்கொண்டது.

Justice BR Gavai

முக்கியமாக, ஒரு நபர் அமர்வில் நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா, சிறுமியின் பாலியல் வழக்கில், தவறாக தொட்டதையும், பைஜாமாவின் கயிற்றை அவிழ்த்ததையும் பாலியல் வன்புணர்வு முயற்சியாக கருத முடியாது என தீர்ப்பளித்திருந்தார்.

அதே நீதிமன்றத்தில் மற்றொரு நீதிபதியான சஞ்சய் குமார் சிங், "பாதிக்கப்பட்ட பெண் குடித்திருந்ததால் அவரே பிரச்னையை வரவழைத்துக்கொண்டுள்ளார்" எனக் கூறி பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கினார்.

உச்ச நீதிமன்றம் கேள்வி!

ஏற்கெனவே கடந்த மார்ச் 17-ம் தேதி நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா அளித்த தீர்ப்பை நிறுத்திவைத்து, அந்த வழக்கை தாமாக முன்வந்து மேல்முறையீட்டுக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்.

நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா

அப்போதே அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் அவதானிப்புகளை, "முற்றிலும் உணர்ச்சியற்றது, மனிதாபிமானமற்றது" மற்றும் "சட்டத்தின் கோட்பாடுகளுக்கு உட்படாதது" என காட்டமாக விமர்சித்தது உச்சநீதிமன்றம்.

மீண்டும் அதேப்போன்ற அவதானிப்புகள் வெளியானதால் அலகாபாத் நீதிமன்றத்துக்கு எதிராக காட்டமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய்.

"உயர் நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது? அதே நீதிமன்றத்தைச் சேர்ந்த மற்றொரு நீதிபதி இப்படிப்பட்ட கருத்தைக் கூறியிருக்கிறார்... ஏன் இதுபோன்ற அவதானிப்புகள்? இதுபோன்ற உணர்வுப்பூர்வமான வழக்குகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" என கவாய் தலைமையில் நீதிபதி ஏ.ஜி.மாசிஹ் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`கல்வி நிலையங்களில் உள்ள சாதி பெயர்களை அகற்ற வேண்டும்' - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள சாதிப் பெயர்களை நான்கு வாரங்களில் நீக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்த கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன... மேலும் பார்க்க

வக்பு : `தனக்கு எதிரான வழக்கை தானே விசாரிப்பதற்கு சமம்’ - உச்ச நீதிமன்ற விசாரணையில் நடப்பது என்ன?

வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், ஏ.ஐ.எம்.ஐ.எம் உள்ளிட்ட 6 கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ்நாட்டில் இருந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ... மேலும் பார்க்க

டாஸ்மாக் : `முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்க..!’ - அமலாக்கத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனையை சட்டவிரோதமானது என அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்த வழக்கு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம்... மேலும் பார்க்க

நடிகர் சைஃப் அலிகான் மீதான தாக்குதல்; ஒரே பிளேடின் 3 துண்டுகள் - 1000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

மும்பையில் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் வீட்டிற்குள் நுழைந்த திருடன், சைஃப் அலிகானை தாக்கிவிட்டு தப்பிச்சென்றுவிட்டான். திருட வந்த நபர் சைஃப் அலிகானின் முதுகு பகுதியில்... மேலும் பார்க்க

`நேற்று கண்டித்த நீதிமன்றம்; இன்று ஆஜரான சீமான்!' - 29-ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

திருச்சி சரக டி.ஐ.ஜி வருண் குமார் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த போது அவர் குறித்தும், அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதி... மேலும் பார்க்க

TASMAC : `ஐகோர்ட்டை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்?’ - தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 8-ந்தேதி வரை மத்திய அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் மீத... மேலும் பார்க்க