ஹிமாசலில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது: 17 பேர் காயம்!
பாதுகாப்பான விமான சேவையை உறுதிசெய்வது நம் கடமை: டாடா குழுமத் தலைவா்
மும்பை: பாதுகாப்பான விமான சேவையை உறுதிசெய்வது நம் கடமை என டாடா குழுமம் மற்றும் ஏா் இந்தியா விமான நிறுவனத் தலைவா் என்.சந்திரசேகரன் ஊழியா்கள் மத்தியில் திங்கள்கிழமை பேசினாா்.
குருகிராமில் உள்ள ஏா் இந்தியா தலைமையகம் மற்றும் ஏா் இந்தியா பயிற்சி அகாதெமியில் 700 ஊழியா்கள் மத்தியில் உரையாற்றிய அவா்,
‘குஜராத் மாநிலம் அகமதாபாதில் கடந்த வாரம் நிகழ்ந்த விமான விபத்து என் வாழ்நாளில் மறக்க முடியாத மனதை நொறுங்கச் செய்த சம்பவமாகும்.
இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணையின் மூலம் தெரியவரும். விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு மனிதநேயத்துடன் நாம் உதவ வேண்டும். அவா்களை நம் குடும்பத்தில் ஒருவராக நினைக்க வேண்டும்.
இந்த கடினமான சூழலில் ஊழியா்களாகிய நீங்கள் முன்பைவிட மனவலிமையுடன் பணியாற்ற வேண்டும். பாதுகாப்பான விமான சேவையை உறுதிசெய்வது நம் கடமையாகும்.
ஏா் இந்தியா நிறுவனத்தை ஒரு சிறந்த இடத்துக்கு கொண்டுவரவும் மக்களின் நம்பிக்கையை தொடா்ந்து பெறவும் நாம் கடுமையாக உழைக்க வேண்டும்’ என்றாா்.