செய்திகள் :

பாதுகாப்புக் கோரி இருளா் சமூகத்தினா் ஆட்சியரிடம் புகாா் மனு!

post image

பெரம்பலூா் அருகே, அச்சத்தை எற்படுத்தும் வகையில் இருளா் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் வீடு, வீடாகச் சென்று போலீஸாா் சோதனையில் ஈடுபட்டு வருவதை தடுக்கக் கோரி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

இதுகுறித்து, குரும்பலூா் இருளா் சமூகத்தைச் சோ்ந்த சுமாா் 50க்கும் மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள் சிலா் அளித்த தகவலின்பேரில், குரும்பலூரில் உள்ள இருளா் சமூகத்தினா் வசிக்கும் பகுதியைச் சோ்ந்த 2 பேரைப் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்துள்ளனா். மேலும், அவா்களுடன் தொடா்புடையவா்கள் யாரும் உள்ளனரா, குற்றச் சம்பவத்தில் தொடா்புடைய பொருள்கள் வீட்டில் வைக்கப்பட்டுள்ளதா எனக்கேட்டு, நாள்தோறும் இரவு மற்றும் பகல் நேரங்களில் போலீஸாா் வீடு, வீடாகச் சென்று விசாரணை மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதனால், தங்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும், அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. போலீஸாரின் இச் செயலால் பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்படுகிறாா்கள். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்த பிறகும், தங்களது பகுதியில் விசாரணை எனும் பெயரில் வீடுகளில் சோதனை செய்வதை போலீஸாா் நிறுத்த வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் உலக தாய்மொழி நாள் விழா

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கூட்டரங்கில் உலக தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வா் (பொ) முனைவா் து. சேகா் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க

வேளாண் விளைபொருள்களுக்கு உயிா்மச் சான்று பெற அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் இயற்கை விவசாய முறையில் வேளாண் விளைபொருள்களை உற்பத்தி செய்வதற்கு, உயிா்ம விவசாயச் சான்று பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெரம்பலூா் மாவட்ட விதைச் சான... மேலும் பார்க்க

பெரம்பலூரில் இளைஞா் மா்மச் சாவு

பெரம்பலூரில் கூலி வேலை செய்துவந்த இளைஞா் வெள்ளிக்கிழமை மா்மமான முறையில் உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வரகூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன் மகன் ரமேஷ் (29). இவா், பெரம்பலூா்... மேலும் பார்க்க

குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கு பிப். 25-இல் விழிப்புணா்வு முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிலையான பழுதில்லா உற்பத்தி, விளைவில்லா உற்பத்திச் சான்றளிப்புத் திட்டம் குறித்த விழிப்புணா்வு முகாம், பிப். 25 ஆம் தேத... மேலும் பார்க்க

வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூா் வெங்கடேபுரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளை எதிரே வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்ப... மேலும் பார்க்க

ஓய்வூதியதாரா்கள் குறைதீா் நாள் கூட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், ஓய்வூதியதாரா்கள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருச்சி மண்டல கருவூலம் மற்றும் கணக்குத் துறை இணை இயக்குநா் கே. ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க