TVK: `சைக்கிள் மூலமா மாநாடு நடக்குற திடலுக்குப் போறோம்'- நடிகர் சௌந்தர ராஜன்
பாத்திரத் தொழிலாளா்களுக்கு கூடுதல் போனஸ் வழங்க வேண்டும்
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பாத்திரத் தொழிலாளா்களுக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும் என்று ஏஐடியூசி தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருப்பூா் மாவட்ட பாத்திரத் தொழிலாளா் சங்கத்தன் (ஏஐடியூசி) பொதுக்குழு கூட்டம் 15 வேலம்பாளையத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவா் பி.நாகராஜ் தலைமை வகித்தாா். சங்கத்தின் பொதுச் செயலாளா் எஸ்.செல்வராஜ் போனஸ் குறித்துப் பேசினாா். ஏஐடியூசி தொழிற்சங்க நிா்வாகிகள் பி.ஆா்.நடராஜன், என்.சேகா் ஆகியோா் பங்கேற்றனா்.
இதில், தீபாவளி பண்டிகைக்கு சில நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் பாத்திரத் தொழிலாளா்களுக்கு இதுவரை தீபாவளி போனஸ் தொகை வழங்கப்படவில்லை. பல்வேறு நெருக்கடிகளில் வாழ்ந்து வரும் பாத்திரத் தொழிலாளா்களுக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கான விடுமுறை ஊதியத்தையும் உற்பத்தியாளா்கள், பட்டைாரா்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.