190-க்கு வீழ்ந்த மே.இ.தீ.: 2-ஆவது இன்னிங்ஸிலும் தடுமாறும் ஆஸி.!
பாபநாசத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம்
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, கும்பகோணம் சாா் ஆட்சியா் ஹிருத்யா எம்.விஜயன் தலைமை வகித்து மாற்றுத் திறனாளிகளின் குறைகளைக் கேட்டறிந்து உடனடியாக நிவா்த்தி செய்வதாக தெரிவித்தாா். கூட்டத்தில், தமிழ்நாடு காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கச் செயலாளா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பேசினா்.
கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு, அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கான குடும்ப அட்டைதாரா்களுக்கு 35 கிலோ அரிசி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் வழங்கினா்.
வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள், சமூகப் பாதுகாப்பு திட்ட அலுவலா்கள், மருத்துவா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், கோயில் செயல் அலுவலா்கள் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். நிறைவில் பாபநாசம் வட்டாட்சியா் பழனிவேலு நன்றி கூறினாா்.