செய்திகள் :

பாமக நிர்வாகிகளுக்கு 3 வாரங்கள் கெடு: அன்புமணி

post image

சென்னை: பாமக அடுத்தகட்டத்துக்குச் செல்ல நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார்.

இன்னும் 10 மாதங்களில் தேர்தல் வருகிறது. உறுப்பினர் அடையாள அட்டைகளை புதுப்பிக்கும் பணிகளை 3 வாரங்களில் முடிக்க வேண்டும். பாமகவில் உண்மையான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு அன்புமணி ஆலோசனை வழங்கியுள்ளார்.

சென்னையில் 6 மாவட்ட செயலர்களுடன் ஆலோசனைக்குப் பின் சோழிங்கநல்லூரில் பாமக மாவட்டச் செயலர்கள் மத்தியில் பேசி வரும் அன்புமணி, உங்களால்தான் மாநாடு வெற்றி பெற்றது, என்னால் அல்ல என்றார்.

மேலும், நானே தலைவர், அன்புமணி செயல்தலைவர் என்று ராமதாஸ் கூறியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாகவும் பேசி வருகிறார் அன்புமணி.

உங்களுக்குக் கொடுத்த பணிகளை 3 வாரங்களுக்குள் செய்து முடிக்க வேண்டும். முடியுமா? பாமக அடுத்தகட்டத்துக்குச் செல்ல நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நமது சந்திப்பின் நோக்கம் 3 வாரங்களில் உங்களைது பணிகளை செய்து முடிக்க வேண்டும் என்றும் மிகப்பெரும் கலக்கத்தில் உள்ள பாமகவினரை உற்சாகப்படுத்தும் வகையிலும், நகைச்சுவையாகப் பேசி சிரிக்க வைத்தும் உரையாற்றினார் அன்புமணி.

யார் அந்த சார்? என இனி கேள்வி எழுப்பினால்.. நீதிமன்ற அவமதிப்பு: வழக்குரைஞர் மேரி ஜெயந்தி

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டதால், யார் அந்த சார்? என இனி கேள்வி எழுப்பினால் அது நீதிமன்ற அவமதிப்பு என்று அரசுத் தரப்பு வழக்குரைஞர் மே... மேலும் பார்க்க

"பெண்களுக்கு துன்பம் விளைவிப்போர் தப்ப முடியாது என்பதற்கு ஞானசேகரன் வழக்கின் தீர்ப்பே சாட்சி"

"பெண்களுக்கு துன்பம் விளைவிப்போர் தப்ப முடியாது என்பதற்கு ஞானசேகரன் வழக்கின் தீர்ப்பே சாட்சி"பெண்களுக்கு துன்பம் விளைவிப்போர் தப்ப முடியாது என்பதற்கு ஞானசேகரன் வழக்கின் தீர்ப்பே சாட்சி என்று இயற்கை வள... மேலும் பார்க்க

ஞானசேகரனுக்கு தண்டனையை அதிமுக சாத்தியப்படுத்தியுள்ளது: எடப்பாடி பழனிசாமி

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் ஞானசேகரனுக்கு தண்டனையை அதிமுக சாத்தியப்படுத்தியுள்ளது என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், அண... மேலும் பார்க்க

ஞானசேகரன் செல்போன் ஃப்ளைட் மோடில் இருந்தது ஆதாரப்பூர்வமாக நிரூபணம்: அரசுத்தரப்பு வழக்குரைஞர்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் குற்றச்செயலில் ஈடுபட்டபோது, ஞானசேகரன் செல்ஃபோன் ஃபிளைட் மோடில் இருந்தது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்குரைஞர் மேரி ஜெயந்தி தெரிவித்துள்ளார்.சி... மேலும் பார்க்க

நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து

இன்று பிறந்த நாள் கொண்டாடும் இசைஞானி இளையராஜாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை, தமிழிசை, மே... மேலும் பார்க்க

ஞானசேகரனுக்கு சிறையில் சலுகைகள் கூடாது! எந்தெந்த குற்றத்துக்கு எவ்வளவு தண்டனை?

சென்னை: 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை குற்றவாளி ஞானசேகரன் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அவருக்கு சிறையில் எந்தச் சலுகைகளும் வழங்கப்படக் கூடாது என்று மகளிர் நீதிமன்ற நீதிபதி எம். ராஜலட்சுமி தீ... மேலும் பார்க்க