செய்திகள் :

பாமக மகளிர் மாநாடு: பூரண மதுவிலக்கு உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

post image

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் வன்னியர் சங்கம் சார்பில் மகளிர் பெருவிழா மாநாடு இன்று (ஆக. 10) நடைபெற்றது.

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ராமதாஸின் மகள் காந்திமதி முதல் தீர்மானத்தை வாசித்தார். அதனைத் தொடர்ந்து மற்ற பெண் நிர்வாகிகளும் தீர்மானத்தை வாசித்தனர்.

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும்

வேலையில்லா திண்டாட்டத்தை போக்க வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனையை ஒழிக்க வேண்டும்.

நீட் தேர்வுக்குச் செல்லும் மாணவிகள் சோதனை என்ற பெயரில் மன வேதனைக்குள்ளாக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

பள்ளி, கல்லூரி, பணிபுரியும் இடங்களில் பாலியல் தொல்லை அதிகரித்து வருவதால், அப்பகுதிகளில் பெண் காவலர்களை நியமிக்க வேண்டும்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் நாள்களின் எண்ணிக்கை மற்றும் கூலியை உயர்த்த வேண்டும்.

பெண்கள் தொழில் கல்வி, ஆராய்ச்சி கல்வி பெறும் வகையில் கூடுதலாக மகளிர் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட வேண்டும்.

ஏழை, எளிய, நடுத்தரப் பெண்கள் கர்பப்பை, மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதால், அவர்களுக்கு இலவச மருத்துவ சேவை வழங்க வேண்டும்.

வன்னியர்களுக்கு 10.5% ஒதுக்கீடை காலம் தாழ்த்தாமல் ஒதுக்கிட வேண்டும்.

தமிழ்நாட்டில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்.

காவிரி பாசன மாவட்டங்களில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தொடக்கப்பட வேண்டும்.

வறுமையில் வாடும் மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

இதையும் படிக்க | கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்- சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

A women's conference was held today on behalf of the Vanniyar Sangam in Poombukari, Mayiladuthurai district

பாமக உள்கட்சி அதிகார மோதல் விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் ராமதாஸ் தரப்பு புகார்

நமது நிருபர்பாமக உள்கட்சி அதிகார மோதல் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சியின் நிறுவனரான ராமதாஸ் தரப்பு செவ்வ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 208 அரசுப் பள்ளிகள் மூடல் ஏன்? தொடக்கக் கல்வித் துறை விளக்கம்

தமிழகத்தில் நிகழாண்டு 208 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணங்கள் குறித்து தொடக்கக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் நிகழாண்டு மாணவா் சோ்க்கை இல்லாத 208 அரசுப் பள்ளிக... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கில் விடுவிப்பு ரத்து: அமைச்சரின் மேல்முறையீடு நிராகரிப்பு

நமது நிருபர்சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தன்னை சிறப்பு நீதிமன்றம் விடுவித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததற்கு எதிராக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு ம... மேலும் பார்க்க

வங்கக் கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி: அடுத்த 2 நாள்களில் மேலும் வலுபெற வாய்ப்பு

வங்கக் கடலில் புதன்கிழமை (ஆக. 13) உருவாகவுள்ள காற்றழுத்தத் தாழ்வு அடுத்த 2 நாள்களில் மேலும் வலுபெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் இந்த வாரம் நடைபெறாது: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

அரசு விடுமுறை என்பதால் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் வரும் சனிக்கிழமை (ஆக.16) நடைபெறாது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். தாயுமானவா் திட்டத்தின் கீழ் சைதாப்பேட்டை மசூத... மேலும் பார்க்க

208 அரசு பள்ளிகள் மூடல்: அன்புமணி குற்றச்சாட்டு

தமிழகத்தில் 208 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் க... மேலும் பார்க்க