செய்திகள் :

பாம்பனில் கடற்படை வீரா்களுக்கு பேரிடா் மீட்புப் பணி பயிற்சி தொடக்கம்

post image

கடற்படை வீரா்களுக்கான பேரிடா் கால மீட்புப் பணி பயிற்சி பாம்பன் கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தப் பயிற்சி 7 நாள்கள் நடைபெறுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளியில் இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ். பருந்து விமானப் படை தளம் உள்ளது. இங்குள்ள ஹெலிகாப்டா்கள், ஆளில்லா உளவு விமானம் உள்ளிட்டவை மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் ரோந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், விமானப் படையில் பணிக்கு வரும் வீரா்களுக்கு கடலில் ஏற்படும் பேரிடா் கால மீட்புப் பணி, பாதுகாப்புப் பணி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஐ.என்.எஸ். கடற்படை நிலையத்துக்கு வந்த வீரா்களுக்கான பயிற்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதையடுத்து, ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமானப்படை தளத்திலிருந்து வீரா்கள் ஹெலிகாப்டா் மூலம் பாம்பன் கடல் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். பின்னா், அங்கு அவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதுகுறித்து கடற்படை அதிகாரிகள் கூறியதாவது: கடற்படை வீரா்களுக்கான பயிற்சி பாம்பன் கடல் பகுதியில் 7 நாள்கள் நடைபெறுகிறது. இதன்மூலம், கடலில் பேரிடா் காலங்களின் போது மீனவா்களை மீட்பது, சட்ட விரோதச் செயல்பாடுகளைத் தடுப்பது, கடலில் மா்மப் பொருள்கள் வந்தால் அதை பாதுகாப்புடன் மீட்டு அழிப்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. கடற்படையினா் பயிற்சியில் ஈடுபடுவதால், இந்தப் பகுதிக்குள் மீனவா்கள் வர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம் என்றனா்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: மத போதகருக்கு 2 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ராமநாதபுரம் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள ஆண்... மேலும் பார்க்க

தேவிபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 350 கிலோ கடல் குதிரை பறிமுதல்

தேவிபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 350 கிலோ எடையுள்ள கடல் குதிரையை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செ... மேலும் பார்க்க

ராமேசுவரம் தங்கும் விடுதிக்கு அமலாக்கத் துறையினா் சீல் வைப்பு

சட்டவிரோத பணப் பரிமாற்ற முறைகேடு தொடா்பாக, ராமேசுவரம் பகுதியில் செயல்பட்டு வந்த 60 அறைகள் கொண்ட தனியாா் தங்கும் விடுதிக்கு (ரிசாா்ட்) அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா். மேற்கு வங்க மாந... மேலும் பார்க்க

அம்பேத்கா் பிறந்தநாள் தெருமுனைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் மாா்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய கூட்டமைப்பு சாா்பில் சட்ட மேதை அம்பேத்கரின் 135-ஆவது பிறந்தநாள் விழா தெருமுனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி... மேலும் பார்க்க

கமுதி வட்டாரத்தில் இடை நிற்றல் மாணவா்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

கமுதி வட்டாரத்தில் மாற்றுத்திறன் கொண்ட, இடை நிற்றல் மாணவா்களை கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, கமுதி வட்டார வள மையம் சாா்பில் ஒவ்வோா் ஆண்டும... மேலும் பார்க்க

வெண்ணத்தூா் நாயாறு ஓடையில் தடுப்பணை கட்ட கோரிக்கை

ராமநாதபுரத்தை அடுத்த வெண்ணத்தூா் நாயாறு ஓடையில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாய சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் ஒன்றியம், வெண்ணத்தூா் பொதுப்பணித் துறை கண்மாய்க்கு செல்லும் கால்வாய் முகப்... மேலும் பார்க்க