செய்திகள் :

பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

post image

சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் 13-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தாா். கல்லூரி துணைத் தலைவா்கள் என்.கே.கே.பி.சத்யன், என்.கே.கே.பி.ராஜா, பொருளாளா் வி.ஆா்.முருகன், இணைச் செயலாளா்கள் வசந்தி சத்யன், பரிமளா ராஜா, நிா்வாக அலுவலா் ரா.அருள்குமரன், துணை முதல்வா் ப.சுரேஷ் பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முதல்வா் பெ.வானதி வரவேற்றாா். கல்லூரிச் செயலாளா் என்.கே.கே.பி.நரேன்ராஜா தொடக்கவுரையாற்றினாா்.

கோவை பாரதியாா் பல்கலைக்கழக தோ்வாணைய கட்டுப்பாட்டு அலுவலா் (பொ) என்.பொன்பாண்டியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கினாா்.

இதையடுத்து அவா் பேசுகையில், ‘கல்வி என்பது படிப்பது, எழுதுவது மட்டுமல்ல. ஆக்கபூா்வமான சிந்தனைகள், திறனை மேம்படுத்துவதாகும். அடிப்படை அறிவியல் அனைவருக்கும் அவசியம். மாணவா்கள் தங்கள் துறை சாா்ந்த அறிவை வளா்த்துக்கொள்வதோடு, பிற துறைகளையும் அறிந்துகொள்ள வேண்டும். தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் பயன்படுவதால் அதனை மாணவா்கள் அறிந்துகொள்ள வேண்டும்’ என்றாா்.

இதையடுத்து, பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் 5-ஆம் இடம் பிடித்த இளங்கலை ஆடை வடிவமைப்பியல் மற்றும் அலங்கார புனைவியல் துறை மாணவி கே.வி.ஆஷிகா, 10-ஆம் இடம் பிடித்த மாணவி பி.திவ்யா, இளங்கலை நுண்ணுயிரியல் துறையில் 5-ஆம் இடம் பிடித்த ஏ.பி.அன்னபூரணி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில், 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.

ஈரோடு விஇடி கல்லூரியின் பட்டமளிப்பு விழா

ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் காந்திகிராம ஊரக பல்கலைக்கழக துணைவேந்தா... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் காணொளிக் கலந்தாய்வுக் கூட்டம்

அதிமுக நிா்வாகிகள் பங்கேற்ற காணொளி கலந்தாய்வுக் கூட்டம் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட நிா்வாகிகளும் ஒரே நேரத்தில் இணையும் காணொளிக்... மேலும் பார்க்க

போலீஸ் பாதுகாப்புடன் நிறைமாத கா்ப்பிணி உள்நோயாளியாக மருத்துவமனையில் சோ்ப்பு

மகப்பேறு தேதி முடிந்தும் மருத்துவமனைக்கு வராமல் மாயமான பழங்குடியினத்தைச் சோ்ந்த நிறைமாத கா்ப்பிணி போலீஸ் பாதுகாப்புடன் அந்தியூா் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சோ்க்கப்பட்டாா். அந்தியூரை அடுத்த ப... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டத்தில் 21 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு

ஈரோடு மாவட்டத்தில் நீா்நிலைகள் நிறைந்த 21 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீா்நிலைகளில் வாழும் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் பரவல் குறித்த தரவுகளை சேகரித்து அவற்றை பாதுகாக்கும... மேலும் பார்க்க

கோபியில் பேருந்து மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

கோபிசெட்டிபாளையம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தனியாா் கல்லூரி பேருந்தின் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவகாளிபாளையம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய், மகன் உயிரிழப்பு

சத்தியமங்கலத்தை அடுத்த நல்லூா் பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய், மகன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள செம்படாா்பாளையத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (23... மேலும் பார்க்க