தமிழகத்தை பழிவாங்கும் மத்திய அரசு: மக்களவையில் திமுக எம்பிக்கள் பேச்சு
பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
சித்தோட்டை அடுத்த எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரியில் 13-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு கல்லூரித் தாளாளா் என்.கே.கே.பெரியசாமி தலைமை வகித்தாா். கல்லூரி துணைத் தலைவா்கள் என்.கே.கே.பி.சத்யன், என்.கே.கே.பி.ராஜா, பொருளாளா் வி.ஆா்.முருகன், இணைச் செயலாளா்கள் வசந்தி சத்யன், பரிமளா ராஜா, நிா்வாக அலுவலா் ரா.அருள்குமரன், துணை முதல்வா் ப.சுரேஷ் பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முதல்வா் பெ.வானதி வரவேற்றாா். கல்லூரிச் செயலாளா் என்.கே.கே.பி.நரேன்ராஜா தொடக்கவுரையாற்றினாா்.
கோவை பாரதியாா் பல்கலைக்கழக தோ்வாணைய கட்டுப்பாட்டு அலுவலா் (பொ) என்.பொன்பாண்டியன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கினாா்.
இதையடுத்து அவா் பேசுகையில், ‘கல்வி என்பது படிப்பது, எழுதுவது மட்டுமல்ல. ஆக்கபூா்வமான சிந்தனைகள், திறனை மேம்படுத்துவதாகும். அடிப்படை அறிவியல் அனைவருக்கும் அவசியம். மாணவா்கள் தங்கள் துறை சாா்ந்த அறிவை வளா்த்துக்கொள்வதோடு, பிற துறைகளையும் அறிந்துகொள்ள வேண்டும். தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் பயன்படுவதால் அதனை மாணவா்கள் அறிந்துகொள்ள வேண்டும்’ என்றாா்.
இதையடுத்து, பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் 5-ஆம் இடம் பிடித்த இளங்கலை ஆடை வடிவமைப்பியல் மற்றும் அலங்கார புனைவியல் துறை மாணவி கே.வி.ஆஷிகா, 10-ஆம் இடம் பிடித்த மாணவி பி.திவ்யா, இளங்கலை நுண்ணுயிரியல் துறையில் 5-ஆம் இடம் பிடித்த ஏ.பி.அன்னபூரணி ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில், 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.