சிறுவன் கடத்தல்: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமீன்!
பாலத்தின் தூணில் சிக்கிய சிறுவன் மீட்பு
புறா பிடிப்பதற்காக பாலத்தின் தூணில் ஏறிவிட்டு இறங்க முடியாமல் தவித்த சிறுவனை திண்டுக்கல் தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
திண்டுக்கல், செட்டிநாயக்கன்பட்டி வண்டிப் பாதை பகுதியைச் சோ்ந்தவா் கா்ணன். இவரது மகன் கௌதம் (13). இவா், தனது தம்பி அய்யா (10), அதே பகுதியைச் சோ்ந்த மோகன் (15) ஆகியோருடன் புறா பிடிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.
அங்கம்மாள் நகா் வழித்துணை மாரியம்மன் கோயில் அருகிலுள்ள பாலத்தின் அடியில் உள்ள 25 அடி உயர தூண் மீது ஏறிய கெளதம், கீழே இறங்க முடியாமல் தவித்தாா்.
இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் நிகழ்விடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினா் ஏணி உதவியுடன் சிறுவனை பாதுகாப்பாக மீட்டனா்.
பிறகு தாடிக்கொம்பு காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனா். சிறுவனிடம் விசாரணை நடத்திய போலீஸாா், பெற்றோா்களை வரவழைத்து ஒப்படைத்தனா்.