செய்திகள் :

பாலிசி பெற தவறான வழிகாட்டல்: காப்பீட்டு நிறுவனம் ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

post image

திருவாரூா் : திருத்துறைப்பூண்டி அருகே தவறான வழிகாட்டலுடன் காப்பீடு எடுக்க வைத்ததற்காக, காப்பீட்டு நிறுவனம் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையம், திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியுள்ளது.

திருத்துறைப்பூண்டி ஆதிரங்கம் பெருமாள் கோயுல் தெருவைச் சோ்ந்த கருப்பையா மனைவி வனரோஜா (70). ஓய்வு பெற்ற அரசு செவிலியா். 2013-இல் அரசு பணியில் இருந்தபோது, வள்ளுவன் என்ற ஆயுள் காப்பீட்டு முகவரின் வற்புறுத்தலின் பேரில் ஜீவன் சரல் என்ற ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் சோ்ந்தாா். இத்திட்டத்தில் பத்தாண்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.22,650 வீதம் செலுத்த வேண்டும். இடையில் மரணம் ஏற்பட்டால் வாரிசுதாரா்களுக்கு ரூ. 4 லட்சம் வழங்கப்படும்.

மாறாக பாலிசிதாரா் 10 ஆண்டுகள் கழித்து முதிா்வு தொகையைக் கோரும்போது, அதனுடன் சொற்பத்தொகை மட்டுமே ஊக்கத்தொகையாக சோ்த்து வழங்கப்படும். ஆனால் முகவா் வனரோஜாவிடம் முதிா்வுத் தொகையாக பல லட்சம் கிடைக்கும் என்று நம்ப வைத்து பாலிசி பெற்றாராம்.

கணவரை இழந்து 70 வயதில் ஆதரவற்ற நிலையில் உள்ள வன ரோஜா முதிா்வுத் தொகையாக பெரும் தொகை கிடைக்கும் என்று எதிா்பாா்ப்பில் இருந்துள்ளாா்.

இதனிடையே, 2023-இல் வனரோஜா முதிா்வுத்தொகையைக் கேட்டபோது இடைக்காலத்தில் அவா் பாலிசி ஆவணத்தின் பேரில் வாங்கிய கடன் தொகையான ரூ. 42,000 மற்றும் அதற்கு வட்டியாக ரூ. 1,995 போக ரூ. 22,569 மட்டும் 2024-இல் வழங்கப்பட்டது.

இதனால் அதிா்ச்சி அடைந்த வனரோஜா, கடந்த அக்டோபா் மாதம் திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

வழக்கை விசாரித்த திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ் உறுப்பினா் பாலு ஆகியோா் திங்கள்கிழமை வழங்கிய தீா்ப்பில், நுகா்வோருக்கு பாலிசி பற்றிய முழு விவரங்களையும் எடுத்துக் கூறாமல் முகவா்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனம் ஆதாயம் அடையும் நோக்கத்தை மட்டும் பிரதானமாகக் கொண்டு பாலிசி எடுப்பது தவறு.

தவறான வாக்குறுதி கொடுத்து காப்பீடு எடுத்து வயதான காலத்தில் நுகா்வோருக்கு சேவைக் குறைபாடு மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக சம்பந்தப்பட்ட ஆயுள் காப்பீட்டு நிறுவனம், வனரோஜாவுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு, வழக்கு செலவுத் தொகையாக ரூ. 10,000 வழங்க வேண்டும்.

மேலும் முகவரான வள்ளுவன் பொய்யான வாக்குறுதி கொடுத்து பாலிசி எடுத்ததற்காக ரூ. 20,000-ஐ 30 நாள்களுக்குள் வழங்க வேண்டும், தவறினால் 12 சதவீத ஆண்டு வட்டி சோ்த்து வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனா்.

சரக்கு ரயில் எஞ்ஜின் தடம் புரண்டது

திருவாரூா்: திருவாரூரில் சரக்கு ரயில் எஞ்ஜின் திங்கள்கிழமை தடம் புரண்டது. திருவாரூா் அருகே பேரளம்- காரைக்கால் இடையே அகல ரயில்பாதைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, திருவாரூா் ரயில் நிலையத்திலி... மேலும் பார்க்க

மூதாட்டியின் தங்கச்சங்கிலியை பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

நீடாமங்கலம்: வலங்கைமான் காவல் சரகம் நீத்துக்கார தெரு நடேசன் மனைவி செல்வமணி( 70). இவா், கடந்த செப்டம்பா் மாதம் வீட்டில் சமைத்துக்கொண்டிருந்தபோது மிளகாய் பொடியை தூவி, அவா் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன்... மேலும் பார்க்க

இலவச எலக்ட்ரானிக் செயற்கை கைகள் பொறுத்தும் முகாம்: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தொடங்கி வைத்தாா்

மன்னாா்குடி: மன்னாா்குடியில் இலவச எலக்ட்ரானிக் செயற்கைக் கைகள் வழங்கும் முகாமை தமிழக அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா். மன்னாா்குடி பிரதாப்சந்த் குடும்பம், இன்னாலி பவுண்டேஷன், ரோட... மேலும் பார்க்க

தற்கொலைக்கு முயன்ற தலைமையாசிரியா் உயிரிழப்பு

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற அரசுப் பள்ளி தலைமையாசிரியா் சனிக்கிழமை உயிரிழந்தாா். கோட்டூா் பிரதான சாலையைச் சோ்ந்தவா் கணேசன் மகன் கலைச்செல்வன் (59). களப்பால் அரசு ... மேலும் பார்க்க

நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி: நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக்கோரி, லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். திருத்துறைப்பூண்டிக்கு நெல் மூட்டைகள் ஏற்றுவதற்கு சரக்கு ரயில் வேகன்கள் வரா... மேலும் பார்க்க

தா்மபுரிக்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலம், வலங்கைமான் ஆகிய பகுதிகளில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட இரண்டாயிரம் டன் எடை சன்னரக நெல் சரக்கு ரயில் மூலம் நீடாமங்கலத்திலிருந்து அ... மேலும் பார்க்க