செய்திகள் :

பாலியல் குற்றங்கள் கடுமையாகக் கையாளப்பட வேண்டும்: அண்ணாமலை

post image

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுக நிர்வாகி ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பான வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், குற்றவாளி ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் ஜூன் 2 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 12 குற்றச்சாட்டுகளில், 11 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளது.

குற்றவாளி ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் கருணைை காட்டக் கூடாது என அரசு தரப்பு வழக்குரைஞர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில்,

"சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை நடத்திய திமுக நிர்வாகி ஞானசேகரன், குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது.

பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளும் பாலியல் குற்றங்களும் கடுமையாகக் கையாளப்பட வேண்டும். இது போன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காதபடி, நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இதுபற்றி,

தமிழகத்தையே உலுக்கிய சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கில் திமுகவின் உடன்பிறப்பான ஞானசேகரன் குற்றவாளி என்பதை உறுதிபடுத்திய சென்னை மகளிர் நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை மனதார வரவேற்று மகிழ்கிறேன்.

பெண்களின் மீது வன்முறை ஏவுபவர்கள் அரசியல் பின்புலமும் பணபலமும் கொண்டவர்களாக இருந்தாலும், சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை மீண்டுமொருமுறை உணர்த்தியுள்ள இந்த தீர்ப்பு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நம்பிக்கையையும் புத்துணர்வையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

பெண்கள் தைரியமாக தங்களுக்கு நேரும் கொடுமைகள் குறித்து புகாரளிக்கவும் இதுபோன்ற தீர்ப்புகள் துணை நிற்கும். அரசியல் ரீதியாக எத்தனை மிரட்டல்கள் வந்தாலும், பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவல்துறையே தனது முழுவிபரத்தை வெளியிட்டு பழி வாங்கினாலும் மனம் தளராது நீதிக்காக போராடி இன்று அதில் வெற்றி கண்டுள்ள அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எனது பாராட்டுகள்!

அதற்கு துணை நின்ற அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நீதிமான்களுக்கும் எனது வாழ்த்துகள்! ஆயிரம் தடைகள் வரினும் அறமே வெல்லும்!" என்று கூறியுள்ளார்.

ஞானசேகரன் குற்றவாளி! ஜூன் 2-ல் தண்டனை: நீதிபதி அறிவிப்பு

மதுரை திமுக பொதுக்குழு கூட்டத்தில் முகக்கவசம் அணிந்துவர அறிவுரை

மதுரையில் நாளை (ஜீன் 1) நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் முகக்கவசம் அணிந்துவர அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் 50 வயது கடந்த நிர்வாகிகள் தங்களது பாதுகாப்புக்காக முகக்கவ... மேலும் பார்க்க

பொறியியல் கலந்தாய்வு- 2.74 லட்சம் பேர் விண்ணப்பம்

கடந்த 25 நாள்களில் பொறியியல் கலந்தாய்வுக்கு 2.74 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.சனிக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 2,12,593 பேர் கட்டணம் செலுத்தியும், 1,77,646 பேர் சான்றிதழ் பதிவேற்றமும் செய்துள்ள... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்தார் தமிழ்நாடு மாநிலத் தகவல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர்

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜகோபாலன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் சனிக்கிழமை அக்கட்சியில் இணைந்தார். இதுகுற... மேலும் பார்க்க

வேலூர்: பச்சிளம் குழந்தை விரல் துண்டிப்பு! அலட்சியம் காட்டிய செவிலியர் மீது வழக்கு

வேலூரில் செவிலியரின் அலட்சியத்தால் பச்சிளம் குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 6 நாள் பச்சிளம் குழ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் முடிவினை கைவிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கான கட்டணத்தை உயர்த்தும் முடிவினை கைவிட வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அரசுப் போக... மேலும் பார்க்க

மதுரையில் முதல்வரின் சாலைப் பேரணி தொடங்கியது!

மதுரை சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருங்குடி பகுதியில் மாபெரும் சாலைப் பேரணியில் ஈடுபட்டுள்ளார்.திமுக பொதுக் குழு கூட்டம் நாளை( ஜூன் 1) மதுரை உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் நடைபெறவுள்ளது. ஆய... மேலும் பார்க்க