செய்திகள் :

பாலியல் குற்றங்கள்: ``விழிப்புணர்வை அதிகரித்துள்ளோம், தைரியமாக புகார்‌ கொடுக்கின்றனர்'' -கீதாஜீவன்

post image

முதியோர் தின கொண்டாட்டம்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு, துறைசார்ந்த திட்டங்கள், செயல்பாடுகள், பயனாளிகள் விவரம், குறைகள், தேவைகள் மற்றும் செயல்முறையில் இருக்கும் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினார். தொடர்ந்து பேராலி சாலையில் தனியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச முதியோர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கீதாஜீவன் முதியோர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் கிரீடம் சூட்டியும் கௌரவித்தார்.

பேச்சு

நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் பேசும்போது, "தமிழக அரசு, குழந்தைகள், முதியோர்கள், பெண்கள், திருநங்கைகளுக்கான திட்டங்களையும், அவர்களுக்கான பாதுகாப்பு சட்டங்களையும் சமூக நலத்துறை மூலம் சிறப்பாக நடைமுறைப்படுத்துகிறது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் ஆதரவற்ற குழந்தைகளுக்கென சுமார் 36 அரசு குழந்தைகள் இல்லம், 147 தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அவர்களுக்கும் விளையாட்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தி அனைத்து கலைகளையும் கற்றுக் கொடுக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டதன்படி, கடந்த ஆண்டு முதல் தொழிற்பயிற்சி, ஆற்றுப்படுத்துதல், விளையாட்டு, பயிற்சி, ஓவியம், இசை போன்ற கலைகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது" என பேசினார்.

அமைச்சர் கீதா ஜீவன்

பாலியல் குற்றங்கள்...

தொடர்ந்து செய்தியாளர்களின்‌ கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், 'பாலியல் குற்றங்கள் மற்றும் பாலியல் சீண்டல்கள் தொடர்பான விழிப்புணர்வை பள்ளி மாணவர்களுக்கு அதிகரித்துள்ளோம். இதன் காரணமாக பள்ளிகளிலோ, வெளி இடங்களிலோ தங்களுக்கு ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்பட்டால் அதை தைரியமாக மாணவிகள் புகார்‌ கொடுக்க முன்வந்துள்ளனர். பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின்‌ மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது." என்றார்.

மேலும் பேசுகையில், "பாஜக தலைவர் அண்ணாமலை, அரசியல் தெரியாமல் பல விஷயங்களையும் பேசி வருகிறார். அவர் பேசுவதையெல்லாம் திமுக பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை" என்றார்.

Vijay: ``விஜய் தனியாக `CBSE' பள்ளி நடத்துகிறார், அதில் இந்தி...'' -பாஜக அண்ணாமலை கேள்வி

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது.மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம்' என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.மத்திய... மேலும் பார்க்க

விகடன் இணையதள முடக்கம்: ``மொத்த கலை வெளிப்பாட்டுக்கும் அச்சுறுத்தல்!'' -ஓவியர் ராமமூர்த்தி கண்டனம்

விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் அடிப்படையில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் சில நாள்களுக்கு முன்பு முடக்... மேலும் பார்க்க

Vikatan Cartoon: ``ஒன்றிய அரசு செய்தது சனநாயகததிற்கு எதிரானது"- மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL)

விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கார்ட்டூன் சம்பந்தமாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் (www.vikatan.com) சில நாள்களுக்... மேலும் பார்க்க

சீமானுக்கு ஈரோடு போலீஸ் சம்மன்; விசாரணைக்கு ஆஜராக உத்தரவு - பின்னணி என்ன?

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. அந்தக் கட்சியின் வேட்பாளரான சீதாலட்சுமிக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 10 நாள்களுக்கு... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள்; ஜே.சி.பி முன்பு குழந்தையோடு அமர்ந்த பெண்கள்! - கரூர் களேபரம்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமாக கிழக்கு காலனி பகுதியில் சுமார் 14 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தினை அதே பகுதியைச் சேர்ந்த இளையராஜா என்பவரது குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்து ... மேலும் பார்க்க

விகடன் இணையதள முடக்கம்: ``மிகத் தவறான முன்னுதாரணம்'' - மு.குணசேகரன் கண்டனம்

விகடன் இணையதளம் முடக்கப்பட்டது பற்றி கடந்த சனிக்கிழமை மாலையிலிருந்தே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாசகர்கள் விகடனின் தளத்தை பயன்படுத்த முடியாமல் இருப்பதைப் பற்றி சமூகவலைதள... மேலும் பார்க்க