செய்திகள் :

Vijay: ``விஜய் தனியாக `CBSE' பள்ளி நடத்துகிறார், அதில் இந்தி...'' -பாஜக அண்ணாமலை கேள்வி

post image
மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது.மும்மொழி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம்' என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

மத்திய அரசின் இந்த இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழ்நாட்டில் பெரும் எதிர்ப்பு அலை கிளம்பியிருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மும்மொழிக் கொள்கைக்கு எதிராகத் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் 'த.வெ.க' தலைவர் விஜய், மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையையும், இந்தித் திணிப்பையும் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அண்ணாமலை

இதற்குப் பதிலளித்துப் பேசியிருக்கும் தமிழக 'பா.ஜ.க' தலைவர் அண்ணாமலை, "தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் இங்கு அதிகம். இதில், 'சிபிஎஸ்இ'யில் படிக்கும் மாணவர்கள் இந்தி படிக்கிறார்கள். தமிழ்நாட்டில் மெட்ரிகுலேஷன் பள்ளியில் தமிழ் கட்டாய மொழியாக இல்லை. தனியார் பள்ளி மாணவர்கள் அதிகமாக இந்தி படிக்கிறார்கள். அப்படியிருக்க இந்தியை ஏன் எதிர்க்க வேண்டும்.

மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் 'தமிழக வெற்றிக் கழக' தலைவர் விஜய், 'விஜய் வித்யாஷ்ரம்' என்ற பெயரில் தனியாக 'சி.பி.எஸ்.சி' பள்ளியை நடத்துகிறார். அந்தப் பள்ளியின் இடம் 'சி.ஜோசப் விஜய்' பெயரில் இருக்கிறது. அந்த இடத்தை 2017ம் ஆண்டிலிருந்து 35 ஆண்டுகளுக்கு 'எஸ்.ஏ. சந்திரசேகர்' பெயரில் இருக்கும் அறக்கட்டளைக்கு விஜய் லீஸுக்குக் கொடுத்திருக்கிறார். அது 'சி.பி.எஸ்.சி' பள்ளி, அதில் இந்தி இருக்கிறது.

விஜய்

அமைச்சர் அன்பில் மகேஷின் குழந்தைகள் பிரஞ்சு படிக்கிறார்கள். 'தி.மு.க'வின் கலாநிதி வீராசாமியும் தனியாக பள்ளி நடத்துகிறார். அவரது பள்ளியில் ஆங்கிலம்தான் முதன்மையான மொழி, தமிழ் கட்டாய மொழியில்லை. சீமான், '2016ம் ஆண்டு விருப்ப மொழியாக இந்தி அல்லது பிற மொழியைப் பயிலலாம்' என்று கூறியிருக்கிறார். இவர்கள்தான் மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை எதிர்க்கிறார்கள்.

வரும் மார்ச் 1-ம் தேதி முதல் ஒவ்வொரு வீடாகச் சென்று 'இந்தி வேண்டுமா, வேண்டாமா' என மக்களிடம் கருத்துக் கணிப்புக் கேட்டுக் கையெழுத்து இயக்கம் நடத்தி, அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவிருக்கிறோம்." என்று பேசியிருக்கிறார்.

விஷக் கடியால் உயிரிழந்த சிறுமி; ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள் - என்ன நடந்தது?

தென்காசி மாவட்டம், இந்த சிவகிரி அருகே உள்ள தென்மலையை சேர்ந்தவர் சுப கார்த்திகா (வயது 9). இவர் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அவருக்கு காலில் ஏதோ அடிபட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அடிபட்ட இடத்தில... மேலும் பார்க்க

செஞ்சி பேருந்து நிலையக் கழிவறையில் கட்டண வசூல்; சுட்டிக்காட்டிய விகடன் -நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

செஞ்சி பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒரு வருட காலமான நிலையில், பொது கழிவறை இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் அலுவலக பணியாளர்கள், ... மேலும் பார்க்க

விருதுநகர்: அரசுப் பள்ளி சத்துணவு மையத்தில் திடீர் ஆய்வு; சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட்..!

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆவுடையாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தில் விருதுநகர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) மற்றும... மேலும் பார்க்க

Kumbh Mela: ``அளவுக்கு அதிகமான டிக்கெட் விற்பனை ஏன்?" -ரயில்வேக்கு நீதிமன்றம் கேள்வி!

டெல்லி ரயில்வே நிலையத்தில் கும்பமேளாவுக்காக கூடிய கூட்டத்தால் 18 பேர் மரணித்ததை அடுத்து தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கில், அதிக முன்பதிவில்லாத டிக்கெட் விற்பனை செய்யப்படுவது, ஒரே பெட்டியில் அதிக நபர்கள் ஏ... மேலும் பார்க்க

`தமிழ்நாட்டில் ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமைகள்; இனியாவது ஸ்டாலின்...' - இபிஎஸ் காட்டம்!

கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகமாக நடந்து வருகின்றன.இது குறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் 'தி.மு.க' தலைமையிலான தமிழ்நாடு அரசைக் ... மேலும் பார்க்க

NTK: "தமிழ்த்தேசியத்திற்கு எதிரான பாஜகவிடம் எங்களை விற்றுவிடுவீர்கள்" - சீமான் மீது தமிழரசன் காட்டம்

நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தமிழரசன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.இது தொடர்பாகத் தமிழரசன் வெளியிட்டுள்ள கடிதத்தில், "32 ஆண்டு காலமாகத் தமிழ்த் தேசிய அரசியலுக்கான ப... மேலும் பார்க்க