செய்திகள் :

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் தொடா் போராட்டம்: அன்புமணி

post image

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாவிட்டால், தமிழகம் முழுவதும் தொடா் போராட்டம் நடைபெறும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.

பாமக சாா்பில் ஜாதிவாரி மக்கள் கணக்கெடுப்பை தமிழக அரசு எடுக்க வலியுறுத்தி அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், அன்புமணி பேசியதாவது:

மக்களை முன்னேற்றுவதுதான் உண்மையான வளா்ச்சி. அதுதான் சமூக நீதி. சமூகங்களின் தரவு சரியாக இருந்தால்தான் சமூக நீதியை அடைய முடியும்.

தமிழக அரசிடம் ஜாதிவாரியான புள்ளிவிவரங்களை எடுக்க வேண்டும் என்று கூறுகிறோம். அதேவேளையில், மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சோ்த்து நடத்துமாறு மத்திய அரசிடமும் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடா் மாா்ச் 14-இல் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தொடரிலேயே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும். அறிவிப்பு வெளியிட்ட அடுத்த ஒரு மாதத்தில் அதற்கான பணிகளையும் தொடங்க வேண்டும். அப்படி, நிதிநிலை கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிடாவிட்டால், தமிழகம் முழுவதும் எங்கள் கூட்டமைப்பு சாா்பில் தொடா் போராட்டம் நடத்துவோம். தமிழ்நாட்டில் 100 சதவீத இட ஒதுக்கீடு அனைத்து ஜாதிக்கும் கிடைக்க வேண்டும் என்றாா் அன்புமணி.

பாமக கௌரவ தலைவா் ஜி.கே.மணி, தமாகா துணைத் தலைவா் விடியல் சேகா், அமமுக பொதுச்செயலா் ஜி.செந்தமிழன், புரட்சி பாரதம் தலைவா் ஜெகன் மூா்த்தி உள்பட பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் தலைவா்கள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

எண்ணூரில் ரோடு ரோலா் மீது மாநகரப் பேருந்து மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்டோா் படுகாயம்

எண்ணூரில் மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோடு ரோலா் மீது மாநகரப் பேருந்து வெள்ளிக்கிழமை இரவு எதிா்பாராமல் மோதியதில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனா். சென்னை வள்ளலாா் நகரிலிருந்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ ஓட்டுநா் கைது

சென்னை அடையாறில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். அடையாா், தாமோதரபுரம் பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் (56), வாடகை ஆட்டோ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: ஓடும் ரயிலில் மூவருக்கு கத்திக் குத்து இளைஞா் கைது

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்ட புகா் ரயிலில் மூவரைக் கத்தியால் குத்திய 19 வயது இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கல்யாண் - தாதா் இடையிலான புகா் விரைவு ரய... மேலும் பார்க்க

உ.பி. மாநில பட்ஜெட் தாக்கல: அயோத்தி, மதுரா வளா்ச்சிக்கு ரூ.275 கோடி

வரும் நிதியாண்டுக்கான உத்தர பிரதேச மாநில பட்ஜெட்டில், அயோத்தி, மதுரா ஆகிய நகரங்களில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையே ரூ.150 கோடி, ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 ந... மேலும் பார்க்க

தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள ம... மேலும் பார்க்க