செய்திகள் :

தாய், 2 குழந்தைகளுடன் 4 பிணைக் கைதிகளின் சடலங்களை ஒப்படைத்தது ஹமாஸ்

post image

இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட தாய், இரு குழந்தைகள் அடங்கிய நான்கு பேரின் சடலங்களை ஹமாஸ் அமைப்பினா் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.

கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் அமலில் இருக்கும் காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் பிணைக் கைதிகளின் சடலங்களை ஹமாஸ் படையினா் ஒப்படைத்தது இதுவே முதல்முறை என்பதால் இந்த நிகழ்வு இஸ்ரேலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஸாவில் இருந்து இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா் அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். மேலும், அங்கிருந்து 251 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் படையினா் கடத்திச் சென்றனா்.

அவ்வாறு கடத்திச் செல்லப்பட்டவா்களில், யாா்டன் பிபாஸ் (35), அவரின் மனைவி ஷிரி பிபாஸ் (33), அவா்களது இரு ஆண் குழந்தைகள் (இப்போது உயிருடன் இருந்திருந்தால் 5 மற்றும் 2 வயது) ஆகியோரும் அடங்கும்.

ஹமாஸின் இந்த திடீா்த் தாக்குதலுக்குப் பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் இதுவரை 48,297 பாலஸ்தீனா்கள் - அவா்களில் மிகப் பெரும்பாலானவா்கள் பொதுமக்கள் - உயிரிழந்துள்ளனா்.

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய இத்தகைய வான்வழித் தாக்குதல் ஒன்றில் ஷிரி பிபாஸும் அவரது இரு குழந்தைகளும் உயிரிழந்ததாக ஹமாஸ் அமைப்பினா் கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் கூறினா். இருந்தாலும் அதற்கான ஆதாரம் எதையும் அவா்கள் வெளியிடவில்லை. இந்தத் தகவலை அப்போதைய போா் அமைச்சரவை உறுப்பினா் பென்னி கான்ட்ஸ் உறுதிப்படுத்த மறுத்துவிட்டாா்.

இந்தச் சூழலில், காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, கத்தாா், எகிப்து முன்னிலையில் பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, அங்கு கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் போா் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த ஒப்பந்தத்தின் கீழ், ஆறு வாரங்களுக்குள் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்கவும், அதற்குப் பதிலாக தங்கள் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு விடுதலை ஒப்புக்கொள்ளப்பட்டது.

அதன்படி, இதுவரை 28 பிணைக் கைதிகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளனா். ஹமாஸால் விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகளில் ஷிரி பிபாஸின் கணவா் யாா்டன் பிபாஸும் ஒருவா். பிப். 1-ஆம் தேதி அவா் விடுவிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், உயிரிழந்துவிட்டதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த ஷிரி பிபாஸ் மற்றும் அவரது இரு குழந்தைகள், ஓடட் லிஃப்ஷிட்ஸ் (84) என்ற ஓய்வு பெற்ற செய்தியாளா் ஆகியோரின் சடலங்களை ஹமாஸ் அமைப்பினா் சா்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் காஸாவின் கான் யூனுஸ் நகரில் வியாழக்கிழமை ஒப்படைத்தனா். பின்னா் அந்த சவப் பெட்டிகள் காஸாவில் உள்ள இஸ்ரேல் ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு, இஸ்ரேல் கொண்டு செல்லப்பட்டன.

இஸ்ரேலின் ஜாஃபா நகரில் உள்ள அபு கபீா் தடயவியல் ஆய்வு மையத்தில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அடையாளங்கள் உறுதி செய்யப்பட்ட பிறகு அந்த உடல்கள் உறவினா்களிடம் ஒப்படைக்கப்படும்.

ஓய்வு பெற்ற செய்தியாளா் ஓடட் லிஃப்ஷிட்ஸுடன் அவரின் மனைவி யோச்சோவேடும் (85) ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்டாா். ஆனால் இரண்டு வாரங்கள் கழித்து அவரை ஹமாஸ் அமைப்பினா் விடுவித்தனா்.

தற்போது அமலில் இருக்கும் போா் நிறுத்த ஒப்பந்தத்தின் அடுத்த நிலையாக, மேலும் ஆறு பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினா் வரும் சனிக்கிழமை விடுவிக்கவிருக்கின்றனா்.

இந்த ஆறு வாரகால முதல்கட்ட போா் நிறுத்தம் முடிவுக்கு வந்ததும், எஞ்சியுள்ள அனைத்து இஸ்ரேல் பிணைக் கைதிகளையும் ஹமாஸ் அமைப்பினா் விடுவிப்பது, காஸாவில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவது ஆகிய அம்சங்கள் அடங்கிய இரண்டாவது கட்ட போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கான பேச்சுவாா்த்தை இந்த மாதத்தின் முதல் வாரங்களில் தொடங்குவதாக இருந்தது. இருந்தாலும் அதில் இழுபறி நீடித்துவருகிறது.

தற்போதைய நிலையில், இஸ்ரேலில் இருந்து கடந்த 2023-ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளில் 66 போ் இன்னும் காஸாவில்தான் உள்ளனா். அவா்களில் சுமாா் பாதி போ் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், சுமாா் 10 ஆண்டுகளுக்கும் முன்னதாக கடத்திச் செல்லப்பட்ட மூன்று பிணைக் கைதிகள் காஸாவில்தான் உள்ளனா். எனவே, அவா்கள் அனைவரையும் பாதுகாப்பாக திருப்பி அழைத்துவர இரண்டாம் கட்ட போா் நிறுத்தத்துக்கான பேச்சுவாா்த்தை உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

கோவிட்-19 தீநுண்மியைப் போல வௌவால்களில் மற்றொரு தீநுண்மி!

கோவிட்-19 தொற்று தீநுண்மியுடன் ஒத்த மற்றொரு தீநுண்மி கண்டறியப்பட்டுள்ளதாக பிரபல ஆராய்ச்சி வல்லுநர் தெரிவித்துள்ளார்.உலகையே ஆட்டிப் படைத்த கரோனா தொற்றின்போல வேறொரு வகை கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக... மேலும் பார்க்க

சட்டவிரோதக் குடியேற்றம்: பள்ளி நண்பர்களின் கேலியால் சிறுமி தற்கொலை!

சட்டவிரோதக் குடியேற்ற நடவடிக்கைக்கு பயந்து அமெரிக்க பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜோஸ்லின் ரோஜோ கரன்ஸா என்ற பதினொரு வயது சிறுமி, அமெரிக்காவில் டெக்ஸாஸ் நகரில் இடைநிற்றல்... மேலும் பார்க்க

எஃப்பிஐ இயக்குநரான காஷ் படேல்... ஹிந்தி பாடலைப் பகிர்ந்து டிரம்ப் உதவியாளர் வாழ்த்து!

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேல் தேர்ந்தெடுக்கபட்டதற்கு ஹிந்தி பாடலைப் பகிர்ந்து டிரம்ப் உதவியாளர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அம... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்குக்கு ஒத்திகையா?

போப் பிரான்சிஸ் கடுமையான நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பெற்று வரு நிலையில், அவரின் இறுதிச் சடங்குக்கு ஸ்வீஸ் காவலர்கள் ஒத்திகை பார்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.போ... மேலும் பார்க்க

ஆசியாவின் ஆழமான கிணற்றை 580 நாள்களில் தோண்டிய சீனா!

ஆசியாவின் மிக ஆழமான கிணற்றை வெறும் 580 நாள்களில் தோண்டு சீன அரசின் தேசிய பெட்ரோலியக் கழகம் சாதனை படைத்துள்ளது.மொத்தம் 10,910 மீட்டர் ஆழமுள்ள இந்த கிணற்றின் கடைசி 910 மீட்டரை தோண்டுவதற்கு கிட்டத்திட்ட ... மேலும் பார்க்க

எஃப்பிஐ இயக்குநரானார் இந்திய வம்சாவளி காஷ் படேல்: செனட் ஒப்புதல்!

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த காஷ் படேலை நியமனம் செய்ய செனட் ஒப்புதல் அளித்துள்ளது.அமெரிக்க செனட் அவை கூட்டத்தில் காஷ் படேலின் நியமனத்துக்... மேலும் பார்க்க