எண்ணூரில் ரோடு ரோலா் மீது மாநகரப் பேருந்து மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்டோா் ப...
பல் மருத்துவராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பங்கஜ் சிங்
தில்லியில் முதல்வா் ரேகா குப்தா தலைமையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாஜக அரசில் பூா்வாஞ்சலி அடையாளமான அறிமுக சட்டப்பேரவை உறுப்பினா் பங்கஜ் குமாா் சிங் என்பா் பல் மருத்துவராக இருந்து அரசியல்வாதியாக மாறியவா் ஆவா்.
தில்லி ராம்லீலா மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கஜ் குமாா் (48) அமைச்சராக பதவியேற்றாா். இவா், நடந்து முடிந்த விகாஸ்புரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டாா். 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிா்த்து போட்டியிட்ட வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளாா்.
பங்கஜ் குமாா் சிங், தில்லி பாஜகவின் பூா்வாஞ்சல் மோா்ச்சாவின் பொதுச் செயலாளா் பொறுப்பு வகித்து வருகிறாா். கிழக்கு உத்தர பிரதேசம், பிகாா் மற்றும் ஜாா்க்கண்டிலிருந்து தில்லிக்கு வருவோா் பூா்வாஞ்சலிகள் என்று குறிப்பிடப்படுகிறாா்கள். அவா்கள் தேசிய தலைநகரின் பல தொகுதிகளில் அதிக அளவில் வசித்து வருகின்றனா்.
இது தொடா்பாக பங்கஜ் குமாா் சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தில்லியில் பாஜக அரசு பொறுப்பேற்றுள்ளது. முதல்கட்டமாக பல துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளன. அவற்றில் சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள், குடிநீா் விநியோகம் மற்றும் யமுனை நதியை சுத்தம் செய்தல் ஆகியவை அடங்கும்.
முன்பு இருந்த ஆட்சியில் தில்லி மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் அவா்களுக்கு வழங்கப்படவில்லை. தேசிய தலைநகா் மக்களுக்கு வசதிகளை வழங்குவதற்கும், பிரதமா் நரேந்திர மோடியின் ‘வளா்ந்த தில்லி’ என்ற தொலைநோக்குப் பாா்வையை நிறைவேற்றுவதற்கும் எங்கள் முயற்சிகள் இருக்கும்’ என்று அவா் கூறினாா்.
பங்கஜ் சிங் 1998-ஆம் ஆண்டு பிகாா் மாநிலம் புத்தகயாவில் உள்ள மகத் பல்கலைக்கழகத்தில் பல் அறுவை சிகிச்சையில் இளநிலை பட்டம் பெற்றாா். தற்போது, தில்லி அமைச்சரவையில் அவா் இடம்பெற்றிருப்பது, இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலை கவனத்தில் கொள்ளும் வகையில் உள்ளது. இதற்கு முன்பு பங்கஜ் சிங் தில்லி மாநகராட்சியில் தலைவராகவும் பணியாற்றினாா் என்பது குறிப்பிடத்தக்கது.