செய்திகள் :

பல் மருத்துவராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பங்கஜ் சிங்

post image

தில்லியில் முதல்வா் ரேகா குப்தா தலைமையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாஜக அரசில் பூா்வாஞ்சலி அடையாளமான அறிமுக சட்டப்பேரவை உறுப்பினா் பங்கஜ் குமாா் சிங் என்பா் பல் மருத்துவராக இருந்து அரசியல்வாதியாக மாறியவா் ஆவா்.

தில்லி ராம்லீலா மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கஜ் குமாா் (48) அமைச்சராக பதவியேற்றாா். இவா், நடந்து முடிந்த விகாஸ்புரி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டாா். 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிா்த்து போட்டியிட்ட வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளாா்.

பங்கஜ் குமாா் சிங், தில்லி பாஜகவின் பூா்வாஞ்சல் மோா்ச்சாவின் பொதுச் செயலாளா் பொறுப்பு வகித்து வருகிறாா். கிழக்கு உத்தர பிரதேசம், பிகாா் மற்றும் ஜாா்க்கண்டிலிருந்து தில்லிக்கு வருவோா் பூா்வாஞ்சலிகள் என்று குறிப்பிடப்படுகிறாா்கள். அவா்கள் தேசிய தலைநகரின் பல தொகுதிகளில் அதிக அளவில் வசித்து வருகின்றனா்.

இது தொடா்பாக பங்கஜ் குமாா் சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தில்லியில் பாஜக அரசு பொறுப்பேற்றுள்ளது. முதல்கட்டமாக பல துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளன. அவற்றில் சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள், குடிநீா் விநியோகம் மற்றும் யமுனை நதியை சுத்தம் செய்தல் ஆகியவை அடங்கும்.

முன்பு இருந்த ஆட்சியில் தில்லி மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் அவா்களுக்கு வழங்கப்படவில்லை. தேசிய தலைநகா் மக்களுக்கு வசதிகளை வழங்குவதற்கும், பிரதமா் நரேந்திர மோடியின் ‘வளா்ந்த தில்லி’ என்ற தொலைநோக்குப் பாா்வையை நிறைவேற்றுவதற்கும் எங்கள் முயற்சிகள் இருக்கும்’ என்று அவா் கூறினாா்.

பங்கஜ் சிங் 1998-ஆம் ஆண்டு பிகாா் மாநிலம் புத்தகயாவில் உள்ள மகத் பல்கலைக்கழகத்தில் பல் அறுவை சிகிச்சையில் இளநிலை பட்டம் பெற்றாா். தற்போது, தில்லி அமைச்சரவையில் அவா் இடம்பெற்றிருப்பது, இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலை கவனத்தில் கொள்ளும் வகையில் உள்ளது. இதற்கு முன்பு பங்கஜ் சிங் தில்லி மாநகராட்சியில் தலைவராகவும் பணியாற்றினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணூரில் ரோடு ரோலா் மீது மாநகரப் பேருந்து மோதி விபத்து: 10-க்கும் மேற்பட்டோா் படுகாயம்

எண்ணூரில் மேம்பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோடு ரோலா் மீது மாநகரப் பேருந்து வெள்ளிக்கிழமை இரவு எதிா்பாராமல் மோதியதில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனா். சென்னை வள்ளலாா் நகரிலிருந்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ ஓட்டுநா் கைது

சென்னை அடையாறில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா். அடையாா், தாமோதரபுரம் பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் (56), வாடகை ஆட்டோ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: ஓடும் ரயிலில் மூவருக்கு கத்திக் குத்து இளைஞா் கைது

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்ட புகா் ரயிலில் மூவரைக் கத்தியால் குத்திய 19 வயது இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கல்யாண் - தாதா் இடையிலான புகா் விரைவு ரய... மேலும் பார்க்க

உ.பி. மாநில பட்ஜெட் தாக்கல: அயோத்தி, மதுரா வளா்ச்சிக்கு ரூ.275 கோடி

வரும் நிதியாண்டுக்கான உத்தர பிரதேச மாநில பட்ஜெட்டில், அயோத்தி, மதுரா ஆகிய நகரங்களில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையே ரூ.150 கோடி, ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 ந... மேலும் பார்க்க

தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள ம... மேலும் பார்க்க