செய்திகள் :

சீமானுக்கு ஈரோடு போலீஸ் சம்மன்; விசாரணைக்கு ஆஜராக உத்தரவு - பின்னணி என்ன?

post image

ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. அந்தக் கட்சியின் வேட்பாளரான சீதாலட்சுமிக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 10 நாள்களுக்கும் மேலாக ஈரோட்டில் தங்கியிருந்து பிரசாரம் செய்தார். பிரசாரத்தின்போது, பெரியார் குறித்து சீமான் பேசிய பேச்சுகள், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதில், குறிப்பாக ஜனவரி 28-ஆம் தேதி, ஈரோடு கிழக்குத் தொகுதிக்குட்பட்ட அசோகபுரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் பிரசாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில், கலந்துகொண்ட சீமான், "நீ வெங்காயத்தை வீசு, நான் வெடிகுண்டு வீசுகிறேன். நான் வெடிகுண்டு வைத்திருக்கிறேன். இன்னும் வீச வில்லை. நான் வெடிகுண்டு வீசினால் உன்னை புதைத்த இடத்தில் புல்கூட முளைக்காது" என்று பேசியதாகத் தெரிகிறது. சீமானின் பேச்சுக்கு பெரியாரிய அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன், அது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்தன.

போலீஸ்

இதைத் தொடர்ந்து, சீமான் பேசிய வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களைக் கைப்பற்றிய கருங்கல்பாளையம் போலீஸார் அவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணைக்காக 20-ஆம் தேதி, நேரில் ஆஜராகுமாறு கருங்கல்பாளையம் போலீஸார் சீமானுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற போலீஸார் சம்மனை நேரடியாக வழங்கியுள்ளனர்.

விஷக் கடியால் உயிரிழந்த சிறுமி; ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள் - என்ன நடந்தது?

தென்காசி மாவட்டம், இந்த சிவகிரி அருகே உள்ள தென்மலையை சேர்ந்தவர் சுப கார்த்திகா (வயது 9). இவர் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது அவருக்கு காலில் ஏதோ அடிபட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அடிபட்ட இடத்தில... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: கட்டிமுடிக்கப்பட்டும் திறக்கப்படாத நியாயவிலைக் கட்டடம்; சிரமப்படும் மக்கள்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாடப்பள்ளி ஊராட்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 8.59 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த நியாயவில... மேலும் பார்க்க

செஞ்சி பேருந்து நிலையக் கழிவறையில் கட்டண வசூல்; சுட்டிக்காட்டிய விகடன் -நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

செஞ்சி பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு ஒரு வருட காலமான நிலையில், பொது கழிவறை இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் அலுவலக பணியாளர்கள், ... மேலும் பார்க்க

`விஜய் ஒன்றிய அரசு அனுமதியுடன் பள்ளி நடத்துகிறார்; அண்ணாமலைக்கு சவால் விடுகிறேன்' - உதயநிதி காட்டம்!

'மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்' என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது தமிழ்நாட்டில் பெரும் விவாவதப் பொருளாகியிருக்கிறது.இதையடுத்து இந்தித் திணிப்புக்கு எதிராகவும்... மேலும் பார்க்க

"தமிழ்நாட்டுக்கான 2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க வேண்டும்!" - மோடிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், 'தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி தருவோம்' என்று பேசியது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.மத்தி... மேலும் பார்க்க

``லோகோ பைலட் இளநீர், ஹோமியோபதி மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்" - அதிகாரி அறிவிப்பால் சர்ச்சை!

இந்திய ரயில்வேயின் லோகோ பைலட்டுகள் பணிக்கு வரும்போது ப்ரீதலைசர்கள் மிஷின் மூலம் சோதிக்கப்படுவார்கள். அதனடிப்படையில், கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் பிரிவின் லோகோ பைலட்டுகள் சோதிக்கப்பட்டனர். அப்போது,... மேலும் பார்க்க