செய்திகள் :

பாலியல் குற்றச்சாட்டில் எம்எல்ஏ இடைநீக்கம்: ‘பிற கட்சிகளுக்கு காங். முன்னுதாரணம்!' -வி.டி.சதீஷன்

post image

கேரள அரசியல் வரலாற்றில் பிற கட்சிகளுக்கு காங்கிரஸ் முன்னுதாரணமாக விளங்குவதாக கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி. டி. சதீஷன் செவ்வாய்க்கிழமை (ஆக. 26) தெரிவித்தார்.

அண்மையில் மலையாள நடிகை ரினி ஆன் ஜாா்ஜ், ராகுல் தன்னிடம் பாலியல் ரீதியில் தவறாக நடந்துகொண்டதாகக் குற்றஞ்சாட்டினாா். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கேரள காங்கிரஸ் பாலக்காடு தொகுதி எம்எல்ஏ ராகுல் மம்கூட்டத்தில் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கோழிக்கோட்டில் செய்தியாளர்களுடன் அவர் பேசும்போது: “முதல்வர் அலுவலகத்திலேயே பாலியல் குற்றச்சாட்டுள்ள நபர்கள் இருப்பதாகவும், அதைக் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனைக் கேள்வி கேட்குமாறு” ஊடகத்துறையினருக்கு சவால் விட்டார். மேலும் அவர் குறிப்பிடுகையில், “ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் பல தலைவர்கள் மீது விமர்சனம் சுமத்தி பல புகார்கள் இருக்கும்போதும், அவர்கள் பதவி சுகம் அனுபவித்து வருவதாக” குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசியதாவது: “காங்கிரஸ் தார்மீக ரீதியாக துணிச்சலைக் காட்டியுள்ளது. இப்போது அதே பாணியில், பினராயி விஜயன் செயல்பட வேண்டிய தருணம்.

இவ்விவகாரத்தில், சிபிஐ(எம்) ரொம்பவும் அரசியல் விளையாட்டைக் காண்பிக்கக் கூடாது. இன்னும் நிறைய வெளிவரவிருக்கின்றன(ஆளுங்கட்சிக்கு எதிரான தகவல்கள்). அது மட்டும் நடந்தால், கேரளமே அதிரும். இதற்காக தேர்தல் வரை காத்திருக்க வேண்டாம். இதனை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார்.

"Landmark in Kerala’s history": LoP Satheesan on Congress MLA Mamkootathil's resignation; dares CM Vijayan to act against ‘sex offenders’ in CPI(M)

வாக்குத் திருட்டு: திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான்! -பாஜகவை விமர்சிக்கும் ராகுல்

வாக்குத் திருட்டு விவகாரத்தில் பாஜகவை விமர்சித்து பேசியுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திருடன் மாட்டிக்கொண்டால் அமைதியாகவே இருப்பான் என்றார்.வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான முற... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு: 5 பேர் பலி; 14 பேர் படுகாயம்

ஜம்மு - காஷ்மீரில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும், 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக கத்ரா பகுதியிலுள்ள வைஷ்ணவி தேவி கோய... மேலும் பார்க்க

கேரளத்தில் அமீபா தொற்றால் மூளை பாதிப்பு: நோயாளிகள் எண்ணிக்கை 18-ஆக உயர்வு!

கேரளத்தில் அமீபா தொற்றால் மூளை பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது.திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் இந்த பாதிப்பு அதிகர... மேலும் பார்க்க

குஜராத்தில் உருவானது வாக்குத்திருட்டு; 2014-ல் தேசிய அளவில் பரவியது: ராகுல் காந்தி

குஜராத்தில் உருவான வாக்குத்திருட்டு 2014 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய அளவில் நடந்ததாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி வாக்குத்திருட்டில் ஈட... மேலும் பார்க்க

பிகாரில் வெற்றி, தோல்வி அடைந்த தொகுதிகளைப் பிரித்து 243 தொகுதிகளிலும் பாஜக ஆலோசனைக் கூட்டம்!

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி(என்.டி.ஏ.) ஆகஸ்ட்டில் தொடங்கிவிட்டது. பிகாரில் அக்டோபர் அல்லது நவம்பரில் தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்ப... மேலும் பார்க்க

திவால் வழக்கில் நீதிபதி விலகல்: ஒரு தரப்புக்கு சாதகமாக உத்தரவிடுமாறு அழுத்தம் வந்ததாகப் புகார்!

தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வைச் சேர்ந்த நீதிபதி சரத் குமார் ஷர்மா, ஒரு திவால் வழக்கை விசாரிப்பதிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டுள்ளார்.ஒரு தரப்புக்கு சாதகமாக உத்தரவிடக்... மேலும் பார்க்க