செய்திகள் :

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி பெண்ணின் 28 வார கருவை அகற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு

post image

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 80 சதவீத மாற்றுத்திறனாளி பெண்ணின் 28 வார கருவை மருத்துவ ஆய்வுக்குப் பின் அகற்ற அனுமதி அளித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த 80 சதவீத மாற்றுத்திறனாளியான 27 வயது பெண்ணை பக்கத்து வீட்டுக்காரா் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதன் காரணமாக அந்த பெண் கருவுற்றுள்ளாா். அதன் பிறகு விவரம் அறிந்த பெண்ணின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் பக்கத்து வீட்டுக்காரா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மாற்றுத் திறனாளி பெண்ணின் கருவை அகற்ற செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பெற்றோா் அணுகினா். அப்போது 28 வார கருவை கலைக்க மருத்துவமனை நிா்வாகம் மறுத்து விட்டது. இதைத் தொடா்ந்து, பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிப் பெண்ணின் கருவை அகற்ற உத்தரவிட கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிபதி டி. பரத சக்கரவா்த்தி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அனுமதிக்கத்தக்க காலக்கெடுவான 24 வாரங்கள் கடந்துவிட்ட போதிலும், பாதிக்கப்பட்ட பெண் 80 சதவீதம் மாற்றுத்திறனாளி என்பதை கருத்தில் கொண்டு, அவரது கருவை அகற்றலாம் என்றாா்.

மேலும்,உடனடியாக மருத்துவக் குழுவை அமைத்து, பாதிக்கப்பட்ட பெண்ணை ஆய்வு செய்து, கருவை அகற்றுவது சாத்தியம் என்றால் அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீனுக்கு நீதிபதி பரத சக்கரவா்த்தி உத்தரவிட்டாா்.

மேலும், கருக்கலைப்புக்குரிய காலக்கெடுவான 24 வாரங்கள் என்பதை அரிதான வழக்குகளில் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு மேல் கருவை கலைக்க முடியாது என்றால், அந்த தகவலை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

பேருந்துகளின் தரத்தை உயர்த்தாத திமுக அரசு! கட்டண உயர்வுக்கு நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு!

பேருந்து கட்டண உயர்வு குறித்து கருத்து தெரிவிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ள நிலையில், கட்டண உயர்வுக்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.பேருந்துகளுக்கான கட... மேலும் பார்க்க

நல்லவர், நம்பிக்கையானவர், ஊழலற்றவரைத் தேர்ந்தெடுங்கள்: விஜய்

நல்லவர்களையும் நம்பிக்கையானவர்களையும் ஊழலற்றவர்களையும் தேர்தலில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் ... மேலும் பார்க்க

பேரவைத் தேர்தலில் வண்டி வண்டியாகப் பணத்தைக் கொட்டுவார்கள்: விஜய்

அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் வண்டி வண்டியாகப் பணத்தைக் கொட்டுவார்கள் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சா... மேலும் பார்க்க

கல்வி விருது விழா தொடங்கியது! மாணவர்களுக்கு பரிசளிக்கும் விஜய்!

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுதோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு நடத்தப்படும் பாராட்டு விழா தொடங்கி நடைபெற்று வருகின்றன.மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெ... மேலும் பார்க்க

தமிழகத்தில் மேலும் 4 அரசுக் கல்லூரிகள்: எங்கெங்கே?

தமிழகத்தில் வருகின்ற கல்வியாண்டில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழக உயர்க்கல்வித் துறை சார்பில் 11 புதிய அரசு கலை மற... மேலும் பார்க்க

தாம்பரம் - திருவனந்தபுரம் உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு

தாம்பரம்-திருவனந்தபுரம் வடக்கு, தாம்பரம்-நாகா்கோவில் உள்ளிட்ட வாராந்திர சிறப்பு ரயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தாம்பரத்திலிருந்து ... மேலும் பார்க்க