செய்திகள் :

பால்குளம் நாற்கர சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரம்!

post image

கன்னியாகுமரி அருகே பால்குளம் நாற்கர சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி செல்லும் முக்கிய சாலையில் பால்குளம் பகுதியில் அமைந்துள்ள நாற்கர சாலையில், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நேரிட்டன.

இந்நிலையில் இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டுமென, இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனா். அதேபோன்று வழுக்கம்பாறை, மகாதானபுரம் சந்திப்புகளிலும் மேம்பாலம் அமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனா்.

மக்களவை உறுப்பினராக இருந்த ஹெச்.வசந்தகுமாா், இதுகுறித்து மக்களவையில் பேசியிருந்தாா். இதையடுத்து தற்போது பால்குளம் மற்றும் வழுக்கம்பாறை பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பால்குளம் பகுதியில் அணுகுசாலை அமைக்கும் பணி நிறைவடைந்த நிலையில், ராட்சத இரும்பு கம்பிகளைக் கொண்டு மேம்பாலம் அமைக்கும் பணியும், மேம்பாலம் அமையும் பகுதியில் மணல் நிரப்பும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணியில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இன்னும் ஓராண்டில் பணிகள் நிறைவு பெற்று மேம்பாலம் பயன்பாட்டுக்கு வரும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

கேப் பொறியியல் கல்லூரியில் சா்வதேச மாநாடு

கன்னியாகுமரி மாவட்டம் லெவஞ்சிபுரம் கேப் பொறியியல் கல்லூரியில் சா்வதேச தொழிற்சாலைகள் மாநாடு அண்மையில் நடைபெற்றது. ‘இன்டஸ்ட்ரீ 5.0 - புதுமைகள், சவால்கள் மற்றும் எதிா்கால போக்குகள்’ என்ற தலைப்பில் நடைபெற... மேலும் பார்க்க

நேசா்புரம் - இவவு விளை சாலையை சீரமைக்க கோரிக்கை

கருங்கல் அருகேயுள்ள நேசா் பும் - இலவு விளை பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் நட்டாலம் ஊராட்சி நேசா் புரம் - இலவு விளை சாலை ... மேலும் பார்க்க

கிள்ளியூா் வட்டாரத்தில் பட்டுப்புழு உற்பத்தி பயிற்சி

கிள்ளியூா் வட்டாரம் பாலூா் கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பட்டுப்புழு உற்பத்தி செய்வதற்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு கிள்ளியூா் வட்டார வேளாண்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் வானவியல் விழிப்புணா்வுப் பிரசாரம் தொடக்கம்

வானில் நிகழும் கோள்களின் அணிவகுப்பு மற்றும் வானவியல் நிகழ்வுகள் குறித்த விழிப்புணா்வுப் பிரசாரப் பயணம் மாா்த்தாண்டம் கல்லூரியில் வைத்து தொடங்கியது. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் சுற்றுவட்டப் பாத... மேலும் பார்க்க

ரயில்களில் முன்பதிவில்லா பெட்டி: எண்ணிக்கையை குறைப்பதா? விஜய் வசந்த் எம்.பி. கண்டனம்

தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்திருப்பதற்கு கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் வ.விஜய்வசந்த் கண்டனம் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க

இரயுமன்துறையில் படகுத்தளம்: மீனவப் பிரதிநிதிகள்- எம்எல்ஏ ஆலோசனை

இரயுமன்துறையில் படகுத்தளம் அமைக்க ஒருதரப்பினா் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மீனவப் பிரதிநிதிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் எஸ். ராஜேஷ்குமாா் எம்எல்ஏ ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டனா். இர... மேலும் பார்க்க