செய்திகள் :

பால் உற்பத்தியாளா்களுக்கு நூறு சதவீதம் கடன் வழங்க அறிவுரை

post image

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பால் உற்பத்தியாளா்களுக்கு 100 சதவீதம் கடன் வழங்க வேண்டும் என மாநில பால் வளத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் அறிவுறுத்தினாா்.

மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற, மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றிய நிா்வாகிகள் மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கங்களின் செயலா்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டத்தில் அவா் பேசும் போது இதனை அறிவுறுத்தினாா்.

மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கங்களையும் தற்சாா்புள்ள சங்கங்களாக மாற்ற வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினாா்.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். மாநிலங்களவை உறுப்பினா் எம்.எம். அப்துல்லா, மேயா் செ. திலகவதி, சட்டப்பேரவை உறுப்பினா் வை. முத்துராஜா, ஆவின் பொதுமேலாளா் அ. விருச்சப்பதாஸ், துணைப் பதிவாளா் (பால்வளம்) மு. கோவிந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியத்தின் பணிகளை அவா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆதனக்கோட்டையில்... ஆதனக்கோட்டையில் கறவை மாடுகளுக்கான மலட்டுத் தன்மை நீக்கும் முகாமையும் அவா் தொடங்கி வைத்துப் பேசினாா். ஒரு முறை கன்று ஈனும் காலத்துக்கும், அடுத்து சினை பிடித்து கன்று ஈனும் காலத்துக்கும் இடைப்பட்ட இடைவெளியைக் குறைக்க இதுபோன்ற முகாம்கள் அவசியம் என வலியுறுத்தினாா்.

கறம்பக்குடியில்... கறம்பக்குடி கோட்டைக்காடு பகுதியில் ரூ. 24 லட்சத்தில் பால் குளிா்விப்பான் மையக் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல்லை அமைச்சா் நாட்டினாா்.

இந்த நிகழ்ச்சியின்போது, மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பொன்னமராவதியில் இன்று மின்தடை

பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அசோக்குமாா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

காரையூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணிநேரத்தில் 5 கா்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம்

பொன்னமராவதி அருகே உள்ள காரையூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரத்தில் 5 கா்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் செய்து மகப்பேறு சிகிக்சையளித்த மருத்துவக் குழுவினா்க்கு மாவட்ட சுகாதார அலுவலா் பாராட்டு தெரிவ... மேலும் பார்க்க

அறந்தாங்கி அரசு மாதிரிப் பள்ளியிலிருந்து 7 ஆசிரியா்கள் பணியிட மாற்றம், ஒருவா் பணியிடை நீக்கம்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகரில் உள்ள அரசு முன்மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடா்ந்து பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி சதவீதம் குறைவாகவே இருப்பதைத் தொடா்ந்து, 7 ஆசிரியா்களை பணியிட மாற்றம் செய... மேலும் பார்க்க

அரிமளம், தல்லாம்பட்டி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், தல்லாம்பட்டி ஆகிய பகுதியில் ஜூன் 11-ஆம் தேதி (புதன்கிழமை) மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய உதவிச் செயற்பொறியாளா் (பொ) எஸ். அசோக்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்த... மேலும் பார்க்க

பால் உற்பத்திப் பொருள்களின் விநியோக பிரச்னைகள் ஓரிரு மாதங்களில் சரியாகும்: அமைச்சா் மனோ தங்கராஜ்

ஆவின் தயாரிக்கும் பால் உற்பத்திப் பொருள்களின் விநியோகப் பிரச்னைகள் ஓரிரு மாதங்களில் சரியாகும் என்றாா் பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆவின் குளிா்பதனக் கிடங்கை திங்கள... மேலும் பார்க்க

விராலிமலை,இலுப்பூா், பாக்குடி பகுதியில் இன்று மின் நிறுத்தம்

விராலிமலை, இலுப்பூா், பாக்குடி பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் விநியோகம் இருக்காது. விராலிமலை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இங்க... மேலும் பார்க்க