செய்திகள் :

பால் உற்பத்தியாளா்களுக்கு வங்கியில் கறவை மாட்டு கடன் பெற்றுத் தர வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

post image

தமிழகத்தில் பால் உற்பத்தியாளா்களுக்கு கறவை மாட்டுக் கடன் பெற்றுத் தர வங்கிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் அறிவுறுத்தியுள்ளாா்.

தமிழக அரசு சாா்பில் பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டு துறை மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தின் அலுவலா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பறிச்சி சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் கூட்ட அரங்கில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது.

தொடா்ந்து, வியாழக்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பில் அமைச்சா் மனோ தங்கராஜ் பேசியது: தமிழகத்தில் அனைத்து பால் உற்பத்தியாளா்களுக்கும் கறவை மாட்டுக் கடன் பெற்றுத்தர துறை அதிகாரிகள் வங்கிகளுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அதேபோல், பால் உற்பத்தியாளா்களுக்கு அவா்கள் வழங்கிய பாலின் தரத்துக்கு ஏற்றவாறு விலை நிா்ணயம் செய்வதை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும்.

ஆவின் மூலம் பால் உற்பத்தியாளா்களுக்கு கால்நடைத் தீவனம் மற்றும் கலப்பு தீவனம் வழங்கி பால் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றாா் அவா்.

இதில், பால் உற்பத்தியாளா்களுக்கு கறவை மாட்டுக் கடன் பெற்று தரும் வழிமுறைகள், தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களை லாபகரமாக மாற்றுவது உள்ளிட்டவை குறித்து பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இந்த நிகழ்வில், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை அரசு செயலா் ந,சுப்பையன், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டு துறை ஆணையா் ஆ.அண்ணாதுரை உள்ளிட்ட அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா். இந்தப் பயிற்சி வெள்ளிக்கிழமை (ஜூலை 4) நிறைவு பெறுகிறது.

கே.எம். காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது!

2025 ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழ்நாட்டிற்கும் தமிழர்க... மேலும் பார்க்க

முதல்வர் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் முதல்வர் கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் சட்... மேலும் பார்க்க

ஓராண்டில் 17,702 பேர் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: கடந்த ஓராண்டில், தேர்வுகளை நடத்தி, தமிழக அரசுப் பணிக்கு இதுவரை 17,702 பேர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல்... மேலும் பார்க்க

பரந்தூர், என்எல்சி, இருமொழிக் கொள்கை... தவெகவின் 20 தீர்மானங்கள் என்னென்ன?

பரந்தூர் விமான நிலையம், இருமொழிக் கொள்கை உள்ளிட்ட தமிழகத்தின் பிரச்னைகள் குறித்து தவெக செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் கட்சிய... மேலும் பார்க்க

ஜூலை 7ல் தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி வருகிற ஜூலை 7 ஆம் தேதி(திங்கள்கிழமை) தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் த... மேலும் பார்க்க

திமுக, பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை: விஜய்

சென்னை: திமுக, பாஜகவுடன் என்றும் தவெக கூட்டணி அமைக்காது என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நடைபெற்று வரும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின்... மேலும் பார்க்க