செய்திகள் :

உலகின் முதல் நாடாக தலிபான் அரசை அங்கீகரிக்கும் ரஷியா!

post image

ஆப்கானிஸ்தான் நாட்டை ஆட்சி செய்யும் தலிபான்களின் அரசை, ரஷியா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிநாடுகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்த அரசுக்கு எதிராக, நடைபெற்ற உள்நாட்டுப் போரின் மூலம், கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்தனர். அதையடுத்து, இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையிலான அரசியலமைப்பு அந்நாட்டில் பிரகடனப்படுத்தப்பட்டது.

சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போர்களினாலும், வறுமையினாலும் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு, சர்வதேச அங்கீகாரத்தைத் தற்போது எதிர்பார்த்து, மற்ற நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில், உலகின் முதல் நாடாக, ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அரசை ரஷியா அங்கீகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு தலைநகர் காபூலில், நேற்று (ஜூலை 3) நடைபெற்ற தலிபான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முத்தாகி மற்றும் ரஷிய தூதர் டிமிட்ரி ஸிர்னோவ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்புக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையடுத்து, ”ரஷியா மற்றவர்களைவிட முன்னதாக உள்ளது. அவர்களது இந்த தைரியமான முடிவு மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். அங்கீகாரத்திற்கான நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளன” என வெளியுறவுத் துறை அமைச்சர் அமிர் கான் முத்தாகி கூறியுள்ளார்.

இதுகுறித்து, ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறுகையில், இஸ்லாமிய அமீரக அரசை அங்கீகரிப்பது, இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புகள் மேம்படும் என்றும், வணிகம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் அதிக வளர்ச்சி ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், பயங்கரவாதம் மற்றும் போதைப் பொருள் கடத்தல் ஆகிய அச்சுறுத்தல்களுக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் போராட்டத்தில் தொடர்ந்து ரஷியா அவர்களுக்கு உதவும் எனக் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து தலிபான் அமைப்பை நீக்கிய ரஷியா, பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் தலிபான்களை தங்களது நேசப் படை என வர்ணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

It is reported that Russia has officially recognized the Taliban government ruling Afghanistan.

இதையும் படிக்க: அமெரிக்க நிதியுதவி நிறுத்தம்! 45 லட்சம் குழந்தைகள் உள்பட 1.4 கோடி உயிரிழப்பு ஏற்படும் அபாயம்!

பாகிஸ்தான்: வீட்டில் இருந்து தப்பி மக்களைத் தாக்கிய வளர்ப்பு சிங்கம்! விடியோ வைரல்!

பாகிஸ்தானின் லாஹுர் நகரத்தில் வீட்டிலிருந்து தப்பிய வளர்ப்பு சிங்கம், சாலையில் சென்ற மக்களைத் தாக்கியதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். லாஹுர் நகரத்திலுள்ள ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட ... மேலும் பார்க்க

செக் குடியரசின் முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிப்பு! சைபர் தாக்குதலின் சதியா?

செக் குடியரசு நாட்டின் தலைநகர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், அந்நாட்டின் பொது போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.செக் குடியரசின் தலைநகர் பிராக் உள்ளிட்ட வடக்க... மேலும் பார்க்க

காஸாவில் வான்வழித் தாக்குதல், துப்பாக்கிச்சூடு: 35 பேர் பலி

காஸாவில் வான்வழித் தாக்குதல், துப்பாக்கிச்சூட்டிற்கு 35 பாலஸ்தீனியர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஸாவில் வெள்ளிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள... மேலும் பார்க்க

ரோமில் எரிவாயு நிலையம் வெடித்ததில் 20 பேர் காயம்

ரோமில் எரிவாயு நிலையம் வெடித்ததில் 20 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இத்தாலியின் தென்கிழக்கு ரோமில் உள்ள எரிவாயு நிலையம் வெள்ளிக்கிழமை அதிகாலை வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுத... மேலும் பார்க்க

தரவுகளைத் திருடிய கூகுள்? ஆன்ட்ராய்டு பயனர்களுக்கு ரூ.2680 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!

அமெரிக்காவில் ஆன்ட்ராய்டு பயனர்களின் தரவுகளைத் தவறாகப் பயன்படுத்தியதாக கூகுள் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், 1.4 கோடி ஆன்ட்ராய்டு பயனர்களின் தரவுகளை... மேலும் பார்க்க

ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய 300 சீன பொறியாளர்கள்?

ஃபாக்ஸ்கான் நிறுவனமானது, 300 சீன பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை, அதன் இந்திய உற்பத்தி தொழிற்சாலைகளிலிருந்து திரும்பப் பெற்றுள்ளது.ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய ஐஃபோன் அசெம்பிள் நிறுவனமா... மேலும் பார்க்க