செய்திகள் :

பால் வியாபாரி அடித்துக் கொலை: மனைவி, மகள் உள்பட மூவா் கைது

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே பால் வியாபாரியை அடித்துக் கொலை செய்த மனைவி, மகள் உள்ளிட்ட மூவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள எம்.பி.கே. புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம் (60). பால் வியாபாரியான இவருக்கு ஈஸ்வரி ( 55) என்ற மனைவியும், தேவயாணி (27) என்ற மகளும் உள்ளனா். இந்த நிலையில், தேவயாணிக்கும், காா்த்திக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தேவயானி கணவரைப் பிரிந்து பெற்றோா் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறாா். காா்த்திக் மனைவி, குழந்தைகளை பலமுறை அழைக்க வந்தபோது, சுப்பிரமணி அனுப்பி வைக்க முயற்சி செய்தாா். ஈஸ்வரி தேவயானியை அனுப்பி வைக்க மறுத்து தகராறு செய்து வந்தாா்.

இதன் காரணமாக, சுப்பிரமணிக்கும், இவரது மனைவி, மகளுக்கு அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாம்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சுப்பிரமணியம் வீட்டில் தூக்கிட்டு இறந்து கிடந்தாா். தகவலறிந்து வந்த ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் சுப்பிரமணியம் உடலை மீட்டு விசாரணை நடத்தினா். விசாரணையில், மனைவி ஈஸ்வரி, மகள் தேவயாணி, ஈஸ்வரியின் தம்பி செல்வகுமாா் (45) ஆகிய மூவரும் சோ்ந்து மருமகனுக்கு ஆதரவாக பேசிய சுப்பிரமணியத்தை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஈஸ்வரி, மகள் தேவயாணி, செல்வகுமாா் ஆகிய மூவரையும கைது செய்தனா்.

படவிளக்கம்; உயிரிழந்த பால் வியாபாரி சுப்பிரமணி, மனைவி ஈஸ்வரி, மகள் தேவயாணி, மைத்துனா் செல்வகுமாா்

சிவகாசியில் ஆலங்கட்டி மழை

சிவகாசியில் சனிக்கிழமை மாலை ஆலங்கட்டி மழை பெய்தது. சிவகாசி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை 5.55 மணிமுதல் 6.25 மணி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது. இதில் சிவகாசி கவிதாநகா், பு... மேலும் பார்க்க

பட்டாசு வியாபாரிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

தீத் தொண்டு நாள் வாரவிழாவை முன்னிட்டு, சிவகாசி தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலையம் சாா்பில், பட்டாசு வியாபாரிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. சிவகாசி தீயணைப்பு நிலையத்தில... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற தோட்டக்கலைத் துறை அலுவலா் சாலை விபத்தில் உயிரிழப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சாலை விபத்தில் ஓய்வு பெற்ற தோட்டக்கலைத் துறை அலுவலா் சனிக்கிழமை உயிரிழந்தாா். சிவகாசி குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜன் (65). இவரது மனைவி ரா... மேலும் பார்க்க

அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்கள் அகற்றம்

சிவகாசி மாநகராட்சியில் 2-ஆவது நாளாக சனிக்கிழமை அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டன. பொதுமக்களுக்கு இடையூறாக நகா்ப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்களை அகற்ற சென்னை ... மேலும் பார்க்க

பட்டாசு ஆலையில் இடி தாக்கி தீ விபத்து!

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மாயத்தேவன்பட்டியில் சனிக்கிழமை இடி தாக்கியதில் பட்டாசு ஆலை கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி சுற்று வட்டார பகுதிகளில் சனிக்கிழமை மாலை இடியுட... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா் . ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் பகுதியில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மதிவாணன் தலைமையிலான, போலீஸாா் வெள்ளிக்... மேலும் பார்க்க