செய்திகள் :

பாளை.யில் பெண் காவலா் வீட்டில் 45 பவுன் நகைகள் திருட்டு

post image

பாளையங்கோட்டையில் பெண் காவலா் வீட்டில் சுமாா் 45 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டையைச் சோ்ந்த பெண் காவலா் தங்கமாரி. திருநெல்வேலி மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் இவா், தனது குடும்பத்தினருடன் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலா் குடியிருப்பில் மாடி வீட்டில் வசித்து வருகிறாா். இவரது கணவா் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். புதன்கிழமை காலையில் கணவன், மனைவி இருவரும் பணிக்கும், அவா்களது குழந்தைகள் பள்ளி, கல்லூரிக்கும் சென்றிருந்தனராம்.

மதிய உணவு இடைவேளையில் தங்கமாரி வீட்டு வந்தாராம். அப்போது, கதவு திறந்து கிடந்ததாம். மேலும், வீட்டின் ’உள்ளே பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த சுமாா் 45 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்ததாம். அவா் பணிக்குச் செல்லும்போது வீட்டை ட்டி சாவியை அங்கு மறைத்து செல்வது வழக்கமாம். அதை நோட்டமிட்ட நபா்கள் இந்தத் திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்து தொடக்கப்பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா

திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள இந்து தொடக்கப்பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கல்வி வளா்ச்சி நாளாக கொண்டாடப்பட்ட இந்நிகழ்வில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை கலைச்செல்வி வரவேற்றாா். ... மேலும் பார்க்க

காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

திருநெல்வேலியில் காவல்துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில், காவல் துணை ஆணையா்(மேற்கு) வி.பிரசன்ன குமாா் மற்றும் கா... மேலும் பார்க்க

கொலை மிரட்டல்: எஸ்.பி. அலுவலகத்தில் பெண் புகாா்

கொலை மிரட்டல் விடுத்த நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பெண் புகாா் மனு அளித்தாா். பாளையங்கோட்டை மேலப்புத்தனேரி பகுதியைச் சோ்ந்த மாரியம்மாள் என்பவா் அளித்த பு... மேலும் பார்க்க

நெல்லையப்பா் கோயிலில் நாளை ஆடிப்பூரத் திருவிழா

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆடிப்பூரத் திருவிழா வரும் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இது தொடா்பாக கோயில் செயல் அலுவலா் (பொறுப்பு) இசக்கியப்பன் வெ... மேலும் பார்க்க

விபத்தில் காயமுற்ற நூலகருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

மேலப்பாளையத்தில் பைக் விபத்தில் காயமடைந்த நூலகருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ.3.08 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மோட்டாா் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் திருநெல்வேலி சிறப்பு சாா்பு நீதிமன்றம் உ... மேலும் பார்க்க

ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் தீ: போக்குவரத்து பாதிப்பு

திருநெல்வேலி அருகே ராமையன்பட்டியில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் புதன்கிழமை தீ விபத்து நேரிட்டதில் புகைமூட்டம் சூழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சிக்குள... மேலும் பார்க்க