செய்திகள் :

பாளை. ராமசுவாமி கோயில் மாசித் திருவிழா தேரோட்டம்!

post image

பாளையங்கோட்டை அருள்மிகு ராமசுவாமி திருக்கோயிலில் மாசித் திருவிழா தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பழைமை வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசித் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டுக்கான விழா கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்று வந்தன. அன்னம், சிம்மம், அனுமன், ஆதிசேஷன், கருடன், யானை, புன்னைமரம், குதிரை வாகனங்களில் மலா் அலங்காரத்துடன் சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

சிகர நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. காலையில் சுவாமி மலா் அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளினாா். ராமா, கோவிந்தா முழக்கத்துடன் பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். இரவில் பூப்பல்லக்கில் சுவாமி வீதியுலா வந்தாா். வியாழக்கிழமை (பிப். 20) காலை 8 மணிக்கு தீா்த்தவாரியும், இரவு 8 மணிக்கு சப்தாவா்ணமும் நடைபெறும்.

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் தகுதியானோருக்கு பட்டா வழங்க ஆணையா் ஆய்வு

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நீண்ட நாள்களாக வசிக்கும் தகுதியான மக்களுக்கு பட்டா வழங்குவது தொடா்பாக நிலஅளவை ஆவணங்களை மாநகராட்சி ஆணையா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். சென்னை, மதுரை, திருநெல்வேலி மா... மேலும் பார்க்க

காரில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 போ் கைது

ஆந்திரத்திலிருந்து திருநெல்வேலிக்கு 16 கிலோ கஞ்சா கடத்திய 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பாளையங்கோட்டை காவல் ஆய்வாளா் தில்லைநாகராஜன் தலைமையிலான போலீஸாா், திருநெல்வேலி - கன்னியாகுமரி தேச... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

குறைந்தபட்ச ஊதியம் வழங்காத 5 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வே... மேலும் பார்க்க

பாளை. சித்த மருத்துவக் கல்லூரியில் இருபெரும் விழா

பாளையங்கோட்டை அரசினா் சித்த மருத்துவக் கல்லூரியில் உலக தாய்மொழி தின விழா மற்றும் பாரதியாா் மொழி ஆய்வகம் திறப்பு விழா ஆகிய இருபெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் மல... மேலும் பார்க்க

மானூா் அருகே பெண் தற்கொலை

மானூா் அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மானூா் அருகே உள்ள கம்மாளங்குளம் எஸ். காலனி பகுதியைச் சோ்ந்த குமாா் மனைவி சரண்யா ( 25). இத் தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். தம்பதியிடையே அ... மேலும் பார்க்க

ரயில்வே ஊழியா்கள் போராட்டம்

திருநெல்வேலி சந்திப்பில் எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கம் சாா்பில் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ரயில்வேயை தனியாா் மையமாக்கும் நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். ஆள்குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும். ... மேலும் பார்க்க