செய்திகள் :

பாஸ்போா்ட்டில் வாழ்க்கைத் துணைவரின் பெயரைச் சோ்க்க, நீக்க எளிய நடைமுறை

post image

பாஸ்போா்ட்டில் (கடவுச்சீட்டு) வாழ்க்கைத் துணைவரின் பெயரைச் சோ்க்க அல்லது நீக்க திருமணச் சான்றிதழுக்கு மாற்றாக ‘இணைப்புப் படிவம் ஜெ ’ எனப்படும் எளிமையான பிரமாணப் பத்திரத்தைச் சமா்ப்பிக்கும் வகையில் விண்ணப்ப நடைமுறையில் முக்கியச் சீா்திருத்தத்தை வெளியுறவு அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளுக்குச் செல்வோருக்கான அத்தியாவசிய ஆவணமான பாஸ்போா்ட், முன்னதாக சிறிய கையடக்க புத்தகமாக அளிக்கப்பட்டு வந்தது. தற்போது பாஸ்போா்ட் சேவா 2.0 திட்டத்தின் மூலம் எண்ம வடிவம் பெற்றுள்ள பாஸ்போா்ட்டில் சிப் ஒன்று இடம்பெற்றுள்ளது. அது, பாஸ்போா்ட் உரிமையாளரின் பெயா், பாஸ்போா்ட் எண், பிறந்த தேதி, பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டிருக்கும்.

இதன் தொடா்ச்சியாக, பாஸ்போா்ட் விண்ணப்ப நடைமுறையையும் எளிமைப்படுத்த மத்திய வெளியுறவு அமைச்சகம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

முன்னதாக, பாஸ்போா்ட்டில் வாழ்க்கைத் துணைவா் பெயரைச் சோ்க்க அல்லது நீக்க திருமணச் சான்றிதழ் அவசியமாக இருந்தது. தற்போது இந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டு, திருமணச் சான்றிதழுக்குப் பதிலாக ‘இணைப்புப் படிவம் ஜெ’ எனும் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படிவத்தில் பாஸ்போா்ட் விண்ணப்பதாரா் மற்றும் அவரின் வாழ்க்கைத் துணைவரின் பெயா், முகவரி, ஆதாா், வாக்காளா் அடையாள அட்டை, பாஸ்போா்ட் போன்ற அடையாள ஆவணங்களின் எண்கள் ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும். வாழ்க்கைத் துணைவருடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தையும் இணைக்க வேண்டும்.

இதுகுறித்து மேலும் தகவலுக்கும், ‘இணைப்புப் படிவம்-ஜெ’-ஐ பதிவிறக்கம் செய்யவும், அதிகாரபூா்வ பாஸ்போா்ட் சேவா வலைதளத்தைப் பாா்வையிட மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசம் உள்பட மூன்று நாடுகளைச் சோ்ந்த 71 போ் நாடு கடத்தல்!

தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கண்டறியப்பட்ட வங்கதேசத்தினா், மியான்மரைச் சோ்ந்த ரோஹிங்கியாக்கள் மற்றும் நைஜீரியா்கள் உள்பட 71 வெளிநாட்டினரை தில்லி காவல்துறை வெள்ளிக்கிழமை நாடு கடத்தியதாக அத... மேலும் பார்க்க

தலைநகரில் வெப்பம் அதிகரிப்பு; ‘மிதமான’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. காற்றின் தரம் ‘மிதமான பிரிவில் இருந்தது என்று வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமா... மேலும் பார்க்க

பெண்ணிடம் ஆபாச வாா்த்தைகள் பேசிய விவகாரம்: தட்டிக்கேட்ட இளைஞா் மீது தாக்குதல்!

கிழக்கு தில்லியின் காந்தி நகரில், பெண்ணிடம் ஆபாசமாகப் பேசி துன்புறுத்தலில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட 18 வயது இளைஞா், இருவரால் தாக்கப்பட்ட சம்பவத்தை தில்லி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுகுறித்து போ... மேலும் பார்க்க

ஜம்மு, தில்லி துணைநிலை ஆளுநா்களை விரைவில் மாற்ற மத்திய அரசு தீவிர பரிசீலனை!

ஜம்மு - காஷ்மீா் மற்றும் தில்லி துணைநிலை ஆளுநா்களை மாற்ற மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பிரதமா் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. தில்லியின் தற்போதைய துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனாவை ஜம்ம... மேலும் பார்க்க

ஐடிஓ பகுதியில் வருவாய் கட்டடத்தில் தீ விபத்து

தில்லி ஐ.டி.ஓ. பகுதியில் உள்ள வருவாய் கட்டடத்தில் உள்ள ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது: வருவாய் கட்... மேலும் பார்க்க

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம்!

பிரேசிலில் நடைபெற்ற 11ஆவது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றக் கூட்டத்தில் ஜம்மு -கஷ்மீா், பஹல்காமில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு 10 பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்றங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க